வண்ணமகளைக் கவரவந்த வேளை

0

– மீரா, ஜெர்மனி

செவ்விதழில் குறுநகை தவழச்
செந்தாமரைப் பூப்போல் மலர்ந்த வதனத்துடன்
செந்தமிழ் மொழி பேசும் இளம் பெண்ணவள்
செருக்குடன் வழிமேல் விழிபார்த்துக் காத்திருக்கிறாள்  meera's poem

வேங்கையவன் வரும்நேரம்தான் காரணமோ ?
வேல்கொண்ட வீர மறவனும் அவனே தானோ ?
வேங்கைமர நிழலில் கயல்விழியைத் தேடும்
வேந்தன் மைந்தன் அவன் சிங்காரச் சீலன்!

வண்ணமயில் விழி வீச்சு இதயத்தை ஊடுருவும்
வகிடெடுத்து வாரிப் பின்னலிட்ட அவள் ஓர் ஓவியம்
வசப்படுத்தும் அவள் அழகு ஐயகோ ஒரு நூதனம்
வசீகரத்தில் மயங்குபவர் மாநிலத்தில் பல்லாயிரம்!

கார்த்திகைத் திங்கள் நன்னாள் பெருநாளாம்
காந்தர்வத் திருமணம் செய்ய அதுவே நல்ல நாளாம்
கன்னியைச் சுயம்கொள்ள வந்த இந்த வேளை,
கனவுக் கன்னி இவளைத் தேரில் கவர்ந்து செல்ல உகந்த வேளை!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *