-மலர் சபா

மதுரைக் காண்டம் – 06: கொலைக்களக்  காதை

கோவலனுக்குக் கண்ணகி உணவு படைத்தல்

பனையால் செய்த ஓலைகொண்டு
கைவேலை செய்யும் மகளிர் அழகாய் முடைந்த
வேலைப்பாடுகள் அமைந்த தடுக்கில்
கோவலன் அமர்ந்தான்
அதன்பின் கண்ணகி                                              food
செந்தாமரை மலர் போன்ற
தன் கைகளைக் குவித்துச்
சுட்ட மண்கலத்தில் உள்ள நீர்கொண்டு
அவன் பாதங்களைக் கழுவி வணங்கினாள்.

மண்மகளின் மயக்கத்தைத் தெளிவிப்பவள் போல்
இலைபோடும் இடத்தில் தரையை மெழுகி,
குலைதராத வாழை இலையை
அதன் உள்பக்கம் வெளித்தோன்றுமாறு
பக்குவமாய் விரித்து,
அதில் சமைத்த உணவினைப் படைத்து
‘அடிகளே! உணவு உண்ணுங்கள்’
என்று கூறி நின்றாள்.

அரசர்க்கு அடுத்த நிலையில் வைத்து
மதிக்கப்படும் வணிக மரபில் வந்தவர்
உணவு உண்ணத் தொடங்கும் போது
கடைப்பிடிக்க வேண்டிய மரபுகளான
வாய்ப்பூச்சு, பலியிடுதல்
முதலியவற்றை எல்லாம் செய்தபின்
கோவலன் உணவு உண்ணத் தொடங்கினான்.

அடிப்படையாக அமைந்த சிலப்பதிகாரத்தின் வரிகள் இங்கே: 35 – 45

http://ilakkiyam.com/sangailakkiyam/23-tamil/iyal/sangailakkiyam/pathinenmerkanaku/ettuthogai/pura-nanooru/1133-kolaikalakathai–

படத்திற்கு நன்றி: கூகுள்

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *