ஊர்ச் சிப்பி நீ!
– ராஜகவி ராகில்
உன் அழகு
திருவிழா
அதில்
தொலைந்து போனான்
என் கண் சிறுவன்!
உன்னைப்
புகைப்படம் எடுத்தால்
தெரியும்
ரோஜாப்பூ!
உன்
பாதம்பட்ட மண்ணெடுத்து
எறும்புகள் கட்டும்
மணல் மாளிகை!
உன்
கொலுசு ஓசை கேட்ட
தென்றல்
உணர்ச்சிவசப்பட்டு ஆகிடலாம்
புயலாக!
உன்
தரிசனம் கிடைப்பின்
தேனாகும்
எவர் குருதியும்!
தமிழ்
தன்னைத் தானே ரசிக்கிறது
நீ
உச்சரிக்கும்போது
மட்டும்!
முழு நிலா
தேய்கிறது
உன் முகஅழகை
வெல்ல முடியவில்லையாம்!
உன்
ஊர்ச்சிப்பிக்குள்
ஒரே ஒரு
முத்து
நீ!