-கவிஜி 

இல்லாதவனைத் தேடும்
இருப்பவன் இருப்பு
நெருப்பு…

கடந்த பாதை முள்
என்றால்
கடக்கப் போவதும்
பாதங்களே…

சுட்டும் விழிச்சுடர் ஆன
சிந்தனையில்
அடர்மத்தியக் காடு
தொலைந்திருந்தது…

தேடல் ஒன்றாய்
இரண்டாய், ஒன்றும்
இல்லாமலும்
கூடில்லாப் பறவையின்
தாகம்…

இறந்தவளின் புடவை
நுனியில் சமையலறை
சிணுங்கிக் கொண்டிருக்கிறது
குழந்தையாக…

சாமர்த்தியம் எதுவெனப்
புரிந்த கணம்
சாமர்த்தியமாய்க் கடந்தது
காலத்தை…!

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.