க. பாலசுப்பிரமணியன்

images (1)

விண்வெளியைக் கண்விழியில்

வளைத்திட்ட மீன்விழியே !

அங்கயர்க் கண்ணியுன் ஆட்சியிலே

ஆதிரையான் அடைக்கலமே !

 

மல்லிகை மணமுடையாள்

மதுரையிலே காட்சி தந்தாள் !

மலையத்துவசன் மகளங்கே

மகாதேவன் கைப்பிடித்தாள் !

 

சித்திரைப் பெண்ணழகி

சிங்காரத் தமிழழகி ,

ஆலவாய்ப்  பேரழகி

அடியார்க்கு அருளழகி !

 

கூடலிலே கொடி பறக்கும்

கோயிலிலே அருள் சுரக்கும்

குறைவில்லா மனம் கேட்டால்

கோமகளே! உன் விழி படைக்கும் !

 

நற்றமிழில்  போற்றுகையில்

நாளெல்லாம் நவராத்திரி !

நாட்டியத் தலைவனுக்கோ

நீ என்றும் சிவராத்திரி!

 

அருளுக்கு உன்னையன்றி

ஆலவாயில் யாரைத்தேட?

நாயகியே! அருள் புரிவாய்

நானிலமும் வாழ்ந்திடவே!

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “மதுரை மீனாட்சி – நவராத்திரி நாயகியர்   (2)

  1. எளிய வார்த்தையில் அழகிய கவிதை.
    அன்பன்,
    மீ.விசுவநாதன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *