நவராத்திரி நாயகியர் (6) சிருங்கேரி சாரதாம்பிகை  

0

க. பாலசுப்பிரமணியன்

Sri-Sharadamba-Sringeri 

 

பாம்புகூடத் தவளைக்குக் குடை பிடிக்கும் !

பாரினிலே அன்புக்குக் குரல் கொடுக்கும் !

பாரதியின் ஆட்சியிலே அமைதி கிடைக்கும்

பார்த்தவுடன் மனம் வியந்து நிற்க்கும் !!

 

கங்கையிலே பொங்கிவரும் வெள்ளமென

துங்கையிலே பொங்குகின்ற அருளமுதே !

துவண்டுவிடும் மானிடருக்கென்றும்

தோள்கொடுக்கும் தெய்வத்திருவே !

 

அங்கமெல்லாம் தங்கமென ஒளிரும்

அறியாமை அகமிருந்து விலகும் !

அன்னையுன் பார்வை அருமருந்தே!

ஆனந்தம் தந்துவிடும் அடிக்கரும்பே!!

 

வேதத்தின் பொருளாக வந்தவளே

பேதமின்றி அருளுகின்ற சாரதையே !

ஆணவத்தை அழிக்கின்ற பார்வை

ஆன்மிகத்தை அருளுமவள் பாதை !!

 

ஆய கலைகள் அறுபத்தி நான்கும்

அசைகின்ற விழிதன்னில் உருவாகும்  !

அறிவும், கல்வியும் அவளாட்சி

ஆனந்த பைரவியாய் அவள் காட்சி!

 

யாழிசையும் இன்னிசையும் இணைசேர

யாகத்துடன் வேதஒலி மேலோங்க

பாரனைத்தும் இசைத்திடுவாள்  பாரதியே !

பாதங்கள் போற்றிடவே  நாளெல்லாம் நற்கதியே  !!

 

கதிரவனின் திசைமாற வரும் ராத்திரி

கண்கள் சோர்வடைந்தால் பகலும் ராத்திரி !

கண்ணோடு கண்ணோக்கி அவளைக் கண்டால்

காலங்கள் மாறாமல் கண்களுக்கு நவராத்திரி !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.