ருசி

-கவிஜி 

உன்னை அறிய
உன்னை அரி!

ஞான ஒளி
போகட்டும்
பின் உன் விழி
போகட்டும்

திண்ணைப் பேச்சு கவனி
தின்னும் சூட்சுமம் பவனி

காதலைக் கட
காமத்தை விட
உற்றாரா நண்பரா
இடம் பொருள்
ஏற்று நடத்து

பெற்றோரா பேரின்பமா?
முன்னது முன்
பின்னது பின்

படி படித்ததை
எழுதாதே
எழுது எழுதியதை
எழுதாதே

சாமி சமயம்
உள்ளாடை
வெளியே காட்டினால்
ஓட்டை என்பேன்

ஒன்பது ஓட்டை
ஒவ்வொன்றும் அற்புதம்
சுத்தம் செய்

ரசி புசி ருசி
பசி கசி வசி
எண்ணாதே வரும் மரணம்…!

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *