நவராத்திரி நாயகியர் (8) -பட்டீஸ்வரம் துர்க்கை அம்மன்

0

க.பாலசுப்பிரமணியன்

 

பட்டதுன்பம் போதுமென்றால்durgai4

பட்டீஸ்வரம் செல்லுங்கள் !

பார்த்தவுடன் அருள்தருவாள்

பாரமெல்லாம் இறக்கிடுவாள் !

 

முக்கண் கொண்டவளே, மூலப்பொருளே !

முகம் பார்த்தால்  அமைதிப் புயலே  !

பக்தருக்குப் பொழியும் அருள்மழையே  !

பைரவியின் பாதங்கள் கருணைக்கடலே !!

 

ஆயுதங்கள்  தாங்கியவள் அமர்ந்தாள்

அறம் காக்க அவளென்றும்  துடிப்பாள்  !

காலனையும் வென்றுவிடும் அவள் கோலம் !

காமனையும் எரித்துவிடும் முக பாவம் !

 

சிங்கத்தின் மேலமர்ந்த  சிங்காரி

சூலமேந்தி சூது விரட்டும் போராளி  !

மகிஷனைக் காலடியில் வீழ்த்திவிட்டு

மனங்குளிர்ந்து அருள் செய்யும் துர்க்கா !

 

எலுமிச்சை விளக்கேற்றி வைத்ததுமே

எல்லையில்லா அச்சங்கள் நீங்கிடுமே !

பூரண நிலவே! பெண்மையின் எழிலே!

பூமழை பொழிந்திட பூத்திடும் தாயே!

 

செவ்வரளியுடன் தாமரையும் சேர்த்து

செந்தமிழ்  பாட்டொன்றில் தோய்த்து

சந்நிதியில் முன்னின்று பேசுங்கள்

சக்தியவள் செவிகொடுத்துக் கேட்பாள் !

 

புலனின் தொல்லைகள் நீங்கிவிடும்

புரியாத பாதைகள் புரிந்துவிடும் !

தாயாக அவளைத்  தத்தெடுத்தால்

மாயாவி! மனதினிலே அமைந்திடுவாள் !

 

நாளொன்று போதாது அவளை நினைக்க  !

நாவொன்று போதாது அவளைத் துதிக்க !

வீரத்தோடு விளையாடும் அவள்  வேதமொழி !

விளக்கேற்றிப்  போற்றிடுவோம் சுபராத்திரி!

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *