ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள் – 28
–சி. ஜெயபாரதன்.
(1883-1931)
ஓவியக்கவி கலில் கிப்ரான் கவிதைகள்
மூலம் : கலில் கிப்ரான்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
என்னை மயக்கியவள்
___________________
“நேற்று நாம் ஊழ்வலியின் விளையாட்டுக் கைப் பொம்மையாக இருந்தோம். ஆனால் இன்று ஊழ்வலி தனது விளையாட்டுப் போதைலிருந்து விழிப்புற்று நம்முடன் நடக்கிறது. இப்போது நாமதைப் பின்பற்றுவதில்லை. அதுதான் நம் பின்னால் வருகிறது.”
கலில் கிப்ரான். (The Sons of the Goddess & the Sons of the Monkeys)
___________________
ஓடிப் போன என் காதலி
___________________
நேற்று இந்தத் தனி அறையில்
வீற்றிருந் தாள்
என்னிதயம்
நேசித்த அந்த மாது !
இந்த வெல்வெட் மெத்தையில் தான்
ஓய்வெடுத்தது, அவளது
எழில் மேனி ! இந்தப்
பளிங்குக் கிண்ணத்தில் தான்
பருகினாள்
பழைய ஒயின் மதுவை !
___________________
நேறைய கனவு இது !
ஏனெனில்
வெகு தூர இடத்துக்குச்
சென்று விட்டாள்
என்னிதயக் காதலி !
சூனியப் பகுதி அது
நினைவில்
மறையும் ஓரிடம் !
___________________
முகம் பார்க்கும் கண்ணாடியில்
இன்னும் உள்ளது
அவளது கைரேகை !
அவள் மூச்சின் நறுமணம்
என்னாடை மடிப்புக்குள்
இன்னும் மணக்கும் !
அவள் இனிய பேச்சின்
எதிரொலி
இந்த அறையில் இன்னும்
கேட்கும் !
___________________
ஆனால் என்னிதயக் காதலி
போனாள் எனை விட்டு
வெகு தூர இடத்துக்கு !
நாடு கடத்தப்பட்ட
ஒரு பள்ளத் தாக்கு அது !
நினைவில்
நிற்காத ஓரிடம் !
___________________
என் படுக்கை அறைச்சுவரில்
தொங்கிடும் அவள்
முழு உருவப் படம் !
முத்து பவளம் பதித்த
வெள்ளிப் பேழையில் நான்
வைத்துள்ளேன்
எனக்கு அவள்
எழுதிய காதல் கடிதங்கள்
எல்லாம் !
அவை யாவும்
நாளை வரைதான்
என்னிடம் இருக்கும் !
அன்று அவற்றைக் காற்று
அடித்துச் சென்று
மௌனம் ஆளும் தளத்தில்
மறக்க வைக்கும் !
___________________