விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி?

0

விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? தீயணைப்பு அதிகாரி செயல் முறை விளக்கம்:
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி பள்ளி மாணவர்களுக்குச் செயல் முறை விளக்கம் அளித்தார்.

தீபாவளி பண்டிகையின் போது பள்ளி மாணவர்கள், விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? என்பது குறித்து தேவகோட்டை தீயணைப்பு நிலையத்தின் சார்பில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் செயல் விளக்கப் பயிற்சி முகாம் நடந்தது. முகாமிற்குப் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம் தலைமை தாங்கினார். ஆசிரியை கலாவல்லி வரவேற்புரை வழங்கினார்.

இதில் தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி கருப்பையா பள்ளி மாணவ-மாணவிகள் எப்படி தீபாவளி பண்டிகையின் போது பாதுகாப்பாகப் பட்டாசுகளை வெடிக்க வேண்டும்? என்பது குறித்து செயல்முறை விளக்கப் பயிற்சி அளித்தார். மேலும் பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைக்க வேண்டும்? எப்படி பட்டாசு பாதுகாப்பாக வெடிக்க வேண்டும்?என்பதையும் விளக்கிச் சொன்னார்.

fire

பின்னர் விழாவில் தீயணைப்பு அதிகாரி கருப்பையா பேசியதாவது; சீன பட்டாசு வேண்டாம். பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பெரியவர்களின் மேற்பார்வையில் வெடிக்க வேண்டும். பெற்றோர்கள் சீன பட்டாசுகளை வாங்கித் தரவேண்டாம். தீ விபத்தை A,B,C,D,E என வகைப் படுத்துகின்றனர்.

A என்பது எரிந்து சாம்பலாகி தண்ணீர் ஊற்றி அணைப்பது ஆகும்.
B என்பது ஆவியாகி எண்ணெய்யில் பட்டுத் தீ பிடிப்பது ஆகும். இதனை மணல் போட்டு அணைத்தல் வேண்டும்.

FIRE விளக்கம்:
FIRE என்பதில் F என்கிற எழுத்துக்கு தீயை கண்டுபிடி- Find
I என்ற எழுத்துக்கு தீயை தெரியப்படுத்துதல் – Inform
R என்ற எழுத்துக்கு தீயில் இருந்து காப்பாற்றுதல் – Rescue
E என்ற எழுத்துக்கு தீயில் இருந்து வெளி ஏறுதல் – Escape/Exit 
என்கிற விளக்கத்தைக் கொடுத்தார்.

மாணவர்கள் வெடி வெடிக்கும்போது அம்மா அப்பாவைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு வெடிக்கவும்.
வெடிக்காத வெடியைக் கையில் எடுக்கக் கூடாது .
ராக்கெட் வெடி வாங்க வேண்டாம்.
குப்பைகளைப் பக்கத்தில் போட்டு வெடிக்க வேண்டாம்.
இறுகிய உடைகளைப் போட்டு கொண்டு வெடி வெடிக்க வேண்டும்.
தீ பிடித்து விட்டால் வாளி தண்ணீரை அப்படியே ஊற்றாமல் கப்பில் அள்ளித் தெளிக்க வேண்டும்.

மேலும் தீ காயங்களின் வகைகளையும், தீ காயம் ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்துக் கூறினார். பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை தேவகோட்டை தீயணைப்பு நிலையத்தைச் சார்ந்த, கனகராஜ் பாலமுருகன் வழங்கினார்கள். ஏராளமான பெற்றோர்களும் கலந்து கொண்டு செயல் விளக்கத்தைப் பார்த்து பயன் பெற்றனர்.

நிகழ்ச்சியில் பரமேஸ்வரி, தனம், ரஞ்சித், காயத்ரி, கார்த்திகா, பிரவீணா, ராஜலெட்சுமி, பரத், ராஜேஸ்வரி உட்பட பல மாணவ, மாணவியர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர். மாணவ,மாணவியர் இனி வரும் தீபாவளி பண்டிகை அனைத்தையும் விபத்தில்லா தீபாவளி பண்டிகையாகக் கொண்டாடுவோம் என உறுதி எடுத்துக் கொண்டனர். நிறைவாக ஆசிரியை செல்வமீனாள் நன்றி கூறினார்.

பட விளக்கம் :
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் விபத்தில்லா தீபாவளி கொண்டாடுவது எப்படி? என தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி கருப்பையா பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார். உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம்

அறிவிப்பு:
பள்ளி தலைமை ஆசிரியர் லெ. சொக்கலிங்கம்

L.Chokkalingam,M.Sc,M.Phil,B.Ed,PGDHRM,BLISc,DGT
Head Master,
Chairman Manicka Vasagam Middle School,
Devakottai.630 302.
Sivagangai Dist.
TamilNadu.
09786113160.
E-Mail : jeyamchok@gmail.com
http://www.kalviyeselvam.blogspot.in/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.