க. பாலசுப்பிரமனியன்

images

விழி தேடும் அழகன் நீ

மதி தேடும் அறிவு !

உயிர் தேடும் உறவு நீ

துயர் தீர்க்கும் மருந்து !

 

தேயாத நிறை நிலவு நீ

திகட்டாத அருள் வடிவு !

குறையாத கருணை வெள்ளம் நீ

கலையாத அழகின் மஞ்சம் !

 

சுவையான சொல்லுக்குச் சொந்தம் நீ

சுடரில் பிறந்த ஒளிவெள்ளம் !

கருத்துக்குள் அடங்காத கவிதை  நீ

கன்னித்தமிழுக்குத் தந்தை!

 

புவி காணாத ஈர்ப்பு நீ

புலன் சிலிர்க்கும் வியப்பு !

பழமாகப் பழுத்த பிள்ளை நீ

பரமனுக்கும் குருவான விந்தை !

 

தினைக் காட்டுத் தலைவன் நீ

தீந்தமிழ் போற்றும் பண்பு !

வினை தீர்க்கும் வேலன் நீ

வேதனைகள் தேடும் விடியல் !

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *