பாரசீக மூலம் : உமர் கயாம் ரூபையாத்
ஆங்கில மூலம் : எட்வேர்டு ஃபிட்ஜெரால்டு
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா.
வாழ்வு மீது மனிதர் வைக்கும் ஆழ்ந்த நம்பிக்கை
நாச மாகும் அல்லது நன்கு முன்னேற்றம் அடையும்;
பாலை வனத்தூசி முகம் மேல் பட்ட பனி போல்
ஒளிதரும் ஓரிரு கணங்கள், மறைந்திடும் பிறகு.
16. The Worldly Hope men set their Hearts upon
Turns Ashes — or it prospers; and anon,
Like Snow upon the Desert’s dusty Face
Lighting a little Hour or two — is gone.
பொற் காசுகளைப் பூட்டி வைத்தவர், அதனை
மழைநீர் போல் காற்றில் வாரி இறைத்தார்,
அப்படி இல்லா பொன் பூமிக்குத் திரும்புவர்,
ஒருமுறை புதைத்த மனிதர் தோண்ட மீள்வர்.
17.And those who husbanded the Golden Grain,
And those who flung it to the Winds like Rain,
Alike to no such aureate Earth are turn’d
As, buried once, Men want dug up again.
எண்ணிப் பார், சிதைந்த வழிப் பயணச் சத்திரத்தில்
இரவு பகலே மாறி மாறிக் வாசற் கதவுக ளாகும்;
சுல்தா னுக்குப் பின் சுல்தானின் பகட்டு மாளிகை
எப்படி ஓரிரு மணிக்குள் சிதைந்தது அவனோடு !
18. Think, in this batter’d Caravanserai
Whose Doorways are alternate Night and Day,
How Sultan after Sultan with his Pomp
Abode his Hour or two and went his way.


Leave a Reply