பொங்கல் திருநாளும் வந்ததே!
-சித்ரப்ரியங்கா பாலசுப்ரமணியன்
அகமோடு முகமும் மலர
ஆதவனை வணங்கி வரவேற்று
இல்லத்தில் பொங்கல் வைத்து
ஈடற்ற மகிழ்ச்சி தானும் பொங்க
உள்ளத்தே நல்லன மட்டும் விதைத்து
ஊராரோடும் நாம்தான் ஒன்றுகூடி
எப்போதும் சமத்துவமே மேலோங்க
ஏகமனதுடன் வாழ்த்துக்கள் பரிமாறி
ஐ! நம் தை மகளுக்கும் நன்றிசொல்லி
ஒப்பற்ற சமுதாயம் உருவாகவே
ஓயாது நாமும் தான் பாடுபடுவோம்!
பொங்கல் நல்வாழ்த்துக்கள் அனைவர்க்கும்!
வாழ்க வளமுடன்!