( எம். ஜெயராமசர்மா .. மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

வல்லமையை உருவாக்கி வாழ்ந்திடுக தமிழென்று
நல்லதொரு தீர்மானம் எடுத்துநின்ற அண்ணாகண்ணன்
சொல்லவொணா துயரத்தால் சோகமதில் மூழ்கிவிட்டார்
அல்லல்நின்று அவர்மீள ஆண்டவனை வேண்டுகின்றேன் !

தமிழறிஞர் அப்பாவை தானிழந்து நிற்குமவர்
தளர்வுநிலை போவதற்கு தான்வேண்டி நிற்கின்றேன்
அமுதானதமிழ் மொழியை அணைத்துநின்ற அப்பாவை
அவர்பிரிந்து விட்டநிலை அடிமனதைத் தொடுகிறதே !

மேகலா துயர்கண்டு மேனியெலாம் சிலிர்க்கிறது
சோகமாய் நிற்குமவர் சுமையகன்று வரவேண்டும்
தாகமாய் தமிழ்வளர்க்கும் தமிழ்நாட்டுக் குடும்பமதன்
சோகமதில் பங்குகொண்டு துயருற்று நிற்கின்றேன் !

தந்தையை இழந்து வாடும் அண்ணாகண்ணன், மேகலா , மற்றும் குடும்பத்தார் அனைவருக்கும் எங்கள் குடும்பத்தினர் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்து .. உங்கள் தந்தையாரின் ஆன்மா நற்கதி
அடைய இறைவனப் பிரார்த்திக்கின்றேம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *