மீ.விசுவநாதன்

Pitta_moluccensis-20040821

குருவி ஒன்று பறக்கிறது
கூடம் மாடம் திரிகிறது
பெருகி வந்த மகிழ்ச்சியிலே
பித்துக் கொண்டு அலைகிறது !
அருகில் கொஞ்சம் வருகிறது
அதிலே அன்பைத் தெளிக்கிறது
அருகிப் போகா இறையருளை
அழகாய்க் காட்டி அமர்கிறது !

“உலையில் பொங்கும் அரிசியினை
உண்ண வேண்டின் பொறுமையினை
சிலைபோல் இருந்து பழகிவர
சிந்தை அழுந்தி சிவமறியும் !
அலையும் மனத்தை அடக்கிடவே
அதுவே வழியாய் மொழிகிறது !”
புலையன் வேதன் அனைவருக்கும்
புருஷன் உணர்வை உணர்த்தியது !

(06.03.2016)
(அறுசீர் விருத்தம் வாய்பாடு:
புளிமா, தேமா, கருவிளங்காய், மா,மா, கருவிளங்காய் )

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *