சிவசக்தி
க. பாலசுப்பிரமணியன்
சொல்லெல்லாம் என்றும் சதாசிவமே !
சொல்லுக்குள் பொருளெல்லாம் சக்தி மயமே !
கண்ணுக்குள் காட்சியெல்லாம் சதாசிவமே ,
கண்ணின் ஒளியாக நிற்பதென்றும் சக்திமயமே !!
நாதவடிவில் நிலைப்பதெல்லாம் சதாசிவமே
நாதத்தின் மூலத்தில் நிற்பதுவோ சக்திமயமே !
உயிர்மூச்சில் ஒலிப்பதுவோ சதாசிவமே
உயிராக அதனுள் நிற்பதுவோ சக்திமயமே !!
அசையும் அசையாப் பொருளெல்லாம் சதாசிவமே,
அந்த அசைவின் இசையோ சக்திமயமே !!
இருந்தும் இல்லாமலிருப்பதுவோ சதாசிவமே,
இல்லாப் பொருளிலும் இருப்பதுவோ சக்திமயமே!!
ஓமென்னும் சொல்லில் உயர்ந்து நிற்பது சதாசிவமே,
அம்மென்னும் சொல்லில் அழகாய் வடிவது சக்திமயமே !!
உடலில் உயிர்ப்பொருளாய் என்றும் சதாசிவமே,
உயிருக்கு பொருளாய் உணர்வாயிருப்பது சக்திமயமே !!