பெண்குரல்
பவள சங்கரி
Trust Law என்ற உலகம் தழுவிய பெண்களுக்கான தொண்டு நிறுவனம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில், பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகளின் வரிசையில், நம் இந்தியா நான்காவது இடத்தில் இருப்பதாகக் கண்டறியப்பட்டுள்ளது. முன்னாள் மத்திய உள் துறை செயலாளர் (union Home Secretary) மதுகர் குப்தா ஓர் அறிக்கையில், 2009ம் ஆண்டு மட்டும் நம் இந்தியாவில் கிட்டத்தட்ட 10 கோடி பேர், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளார்கள் என தெரிவித்துள்ளார். அவர்களில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் 30 இலட்சம் பாலியல் தொழிலாளர்கள் உள்ளனர் என்றும் அவர்களில் 40 சதவிகிதம் பேர் குழந்தைகள் எனவும் இந்திய மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ – 2009) தெரிவித்துள்ளது.
அன்பினிய சகோதரி , நெஞ்சை உலுக்கும் நிலமை. பெண்களிஒன் கெளரவம் காக்கப்பட வேண்டுமானால் அது சமுதாயத்தின் அடிமட்டத்தில் இருந்து மாற்றம் கொள்ள வேண்டும். சிந்திக்க வைக்கும் பதிவு.