ஒரு புரட்சிக்காரரை நினைவு கூர்தல் எளிதானதில்லை

0

 

எஸ் வி வேணுகோபாலன்

baghatsingh8

ஒரு புரட்சிக்காரரை யாரும்
சொற்களால்
கவிதையால்
புகைப்படத்தால்
ஓவியத்தால்
சிற்பத்தால்
ஏன்
இசையால் கூட
அத்தனை துல்லியமாகக் கொண்டு வந்து
நிறுத்த முடிவதில்லை…

ஒரு கலகச் சிந்தனையாளரை யாரும்
உவமைப் படுத்துவதிலோ
ஆய்வுக்கு உட்படுத்துவதிலோ
கல்வெட்டுக்களில் பொறிப்பதிலோ கூட
நிலைக்க வைத்துவிட முடிவதில்லை

ஓர் எழுச்சிகர இளைஞரைச்
சட்டையில் தாங்கியும்
முத்திரையாய் உருக்கொண்டும்
கணினித் திரையை அலங்கரித்தும்
ஏன்
அலைபேசியின் குரலாக்கியும் கூட
எல்லா நேரமும்
உடனிருக்க வைத்துவிட முடிவதில்லை

புரட்சியின் விதைகளை விடாது தூவுவதிலும்
கேள்வியின் தாகத்தை விடாது தூண்டுவதிலும்
மாற்றத்திற்கான நெருக்கடியை விடாது முற்றவிடுவதிலும்
பரந்த நேயத்திற்கான உள்ளத்தை விடாது தொழுவதிலும்
சுதந்திரக் காற்றுக்கான அலைமோதலை விடாது ஆதரிப்பதிலும்

வாழ்ந்து கொண்டே இருப்பார் பகத் சிங் –
தூக்குக் கயிற்றின் இறுக்கத்தை
மிக இலேசான புன்னகையால்
உடைத்தெறிந்து விட்டு !

***************
நன்றி: தீக்கதிர்: மார்ச் 23, 2016

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.