ராஜகவி ராகில்
மனசெல்லாம்
ரோஜாப் பூக்களைவிட லட்சம் மடங்கு நறுமணம்
பக்தியோடு இருக்கும் போது .
இதயம் உருகி உருகி
இறைநாமம் உச்சரிக்கிறேன்
பனித் துளி மென்மையை பின்தள்ளுகிறது என் இதயம் .
பாவ நச்சு இருளுக்கு எனது வானத்தில்
இடமில்லை என்றால்
உயிருள்ள ஒளி நான் .
சொர்க்கத்தை அடைகின்ற சிறகு
வணக்கம் .
இந்த உலகம்
ஆகப் பெரிய பொய் என்று நம்புகின்ற போது
மிகப் பெரிய மெய்யாகிறேன் நான் .
இன்னொரு வாழ்க்கை இருக்கிறது என்று
நம்புகின்ற எறும்புகூட
தீண்டுவதற்கு மறுக்குமே .
ஓட்டைகளால் ஆன இந்த வாழ்க்கைக் கப்பல்
ஆத்மீகக் கடலில் மட்டுந்தான் மிதக்கும் .
இருளை நேசிப்பதில்லை
இறை பாதை .

Leave a Reply