விவேக்பாரதி 

 

நேரிசை ஆசிரியப்பா 

 

கதிரவ னுதியாக் கருநிறக் காலை
சதிர்படு மந்தச் சமவெளிப் பனியின்
பால்நிற மன்ன படுவழ கோடே
கால்நிற முள்ளக் கருநிற நாராய் !
பெறுமல கதிலே பேருரு கொண்ட
உறுமீ னேந்தி யுச்சியிற் செல்வாய் !
உனதருங் கூட்ட மோய்விட மெல்லா
மெனதருந் தலைவ ! னேவு கணையன் !
விண்ணளந் திட்ட விசையன் ! வீரன் !
கண்ணினி லதனைக் காட்டா மனிதன் !
அப்துல் கலாமெனு மதிசயக் கார !
னொப்பிலா தலைவன் ! ஒழுகிய பண்பன் !
தலைமுடி கவிழ்ந்தும் தலைகவி ழாதே
யுலகினைக் கண்ட உத்தம வில்லன் !
வீணையும் மீட்டும் வித்தகக் காரன் !
ஆணைக ளன்பாய் அவழ்த்திடும் மன்னன் !
அழகிற குன்போ லக்கினிச் சிறகைத்
தொழுதிட விரித்த தொல்லறி வாளன் !
தென்றிசை தோன்றி எண்திசை யெங்குந்
தன்பெய ரொலிக்கத் தமிழ்சொலுந் தீரன் !
நாடிதை யாண்ட நாயக ! னென்கோ !
ஆடிடா குணத்த ! னழிவினுக் கழிவை !
ஆண்டவ னென்னு மாணவக் காரன்,
ஆண்டவ னுயிரை அருகி லிழுத்துச்
சுயநலச் செய்கை சுயவுரு காட்டிக்
கயவனைப் போலே கடமையைச் செய்திங்
கின்றோ டோராண் டாச்சென
நின்றல றிடுவாய் நீயழு வாயே !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.