கவியோகி வேதம்

 
எத்தனை அழகு! எத்தனை அமைதி!
..இறைவனின் சன்னதியில்!
முத்தெனும் பல்லின் ஒளியில் மூழ்கினன்
…முருகனின் தண்ணருளில்!
.
எத்தனை முயன்றும் சொல்லே வரலையே?!
… எங்ஙனம் பாடிடுவேன்?
சத்தினை உறிஞ்சிய தலைவனின் அருளையே
….சாரமாய் நாடிடுதே!!
.,
சூடவே தொடுத்த மாலையும் நழுவித்–
..தொலைவில் போனதுவே!
.பாடவே எடுத்த பல்லவி மறந்ததே,
……பதட்டம் ஆனதுவே!
.
கண்ணின் வீச்சில் உலகம் மறந்தது;
…கவலையும் பறந்ததுவே!!
தண்ணருள் புன்னகை முழுதுமே என்னைச்
சக்கையாய்ச் செய்ததுவே!
.
‘என்னஓர் புண்ணியம் செய்தனை!’- எனும்சொல்
… ..எங்கோ கூறியதே!
மின்னலாய் ஓர்வேல் தொடவே , ‘அவனாய்’-
..மேனியே மாறியதே!
**********************************************(கவியோகி வேதம்)29-7-16`

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *