கண்கள் உடைக்கின்ற பாறை

 

 

ராஜகவி ராகில் 

 

 

உன்னிடம் குதிரையிருக்கலாம்

குதிரை நீயென ஆசைப்படு

உன் கால்களால் நடக்கவும் ஓடவும் பாயவும் குதிக்கவும்

விரைந்து கடக்கவும்

 

உன் கால்கள் சக்கரங்கள்

உன் கால்கள் சிறகுகள்

உன்னை நகர்த்திச் செல்லவும்

உயரம் ஏறி நீ தொடவும்

பறந்து வானம் பிடிக்கவும்

 

அறுந்து போன ஒற்றைச் செருப்பு

ஒரு கால் உடைந்த ஆசனம் என

எண்ண இயந்திரம் உன் எரிபொருள் பெறுமாகிடின்

உயிர்க்கும் உன் அவ நம்பிக்கை

 

அவநம்பிக்கைப் புயல் சோம்பற் கோடை

நெருங்கச் செய்திடின்

பட்டுப் போய்விடும் வாழ்க்கை வேர்

 

நம்பிக்கை

தலையிலிருக்கும் மலையையும் சிறு கல்லாக்கிவிடும்

அவ நம்பிக்கை

தலையில் படிகின்ற தூசையும்

மலையாக்கிவிடும்

 

காற்று பாறை ஆனால்

உன் மூக்குச் சம்மட்டி கொண்டு உடைத்துச் சுவாசி

கண்களால் மெழுகுவர்த்தி ஏற்று

பாதை இருளென்றால்

 

உனக்குள் மழை இருக்கும் போது

கோடையிடம் முறையிடாதே

உனது நீரூற்றை நீதான் கண்டு பிடிக்க வேண்டும்

 

மரம் நிற்கிறது என்கிறாய்

அது வேர்களால் நீர் நோக்கி நகர்வது மறந்து

தீ நேசி

அதன் சுறு சுறுசுறுப்புக்காக .

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *