பவள சங்கரி

maa-chandika-ci72_l

ஆயிரமாயிரம் திருநாமங்கள் அன்னையின்
ஆனந்தப்பாயிரம் இசைக்கோலங்கள் சங்கமம்
விண்ணிலேற்றும் விசைக்களிப்பின் சாகசங்கள்
கண்ணிலூற்றும் காவியங்களின் ஒலியோவியங்கள்

எண்ணமெலாம் ஏதுமிலா பெருவெளியின்
விகல்பமிலா வித்தகச் சாரல்கள்
கள்ளமிலா களிப்புகளின் சாளரங்கள்
அன்னையின் மலர்பாதங்களின் சரணங்கள்

கருணைக்கடலின் பேரலையின் பரிணாமங்கள்
கற்பனைக்கெட்டா வானலையின் ஒளியோவியங்கள்
மலைகளின் பிரம்மாண்டத்தினூடே மடுவாய்
மலைத்துநிற்கும் மனக்கூட்டில் மாயாசாலங்கள்

மாசற்ற மனமும் தீதில்லா அறனும்
நீசமற்ற களிப்பும் வீணில்லா உழைப்பும்
இருளற்ற வாழ்வும் தளர்விலா உளமும்
எஞ்ஞான்றும் அருளும் அன்னையே!

 
நின்னையே நித்தம் தொழுதேற்றியே
பின்னையே பித்தம் மாய்த்துறவே
வினையாற்றும் மாதேவியே மாசற்ற
சோதிவடிவே! சுடரொளியே! சரணமம்மா!!

அன்னையின் அழகோவியத்திற்கு நன்றி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *