மீ. விசுவநாதன்

sri
போக்கிடம் காணாத போது
புகலிடம் தந்தவரைப் போலே
பூக்களைத் தூவியொரு பாதை
போட்டவர் பேரென்ன தோழி !
தாக்கிடும் வன்பசியைப் போக்கத்
தாய்யெனக் கைக்கொண்டு சேர்த்து
ஆக்கிய நல்லுணவு தந்த
அன்பினைப் போற்றுகிறேன் வாழி!

மூடனாய் ஊர்சுற்றி வந்த
முகத்தினை நேசமுடன் பார்த்துச்
சூடனாய்க் கல்விதனைக் காட்டிச்
சோதியாய்க் காட்டியதார் தோழி !
பாடநான் வாய்திறந்த போது
பளிச்சென வார்த்தைகளைக் கொட்டிப்
போடுநீ உன்கவிக்குள் என்றே
சொன்னவள் “சாரதாவே” வாழி !
(14.10.2016 01.56 am)

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.