பா.ராஜசேகர்
பாலும் தண்ணீரும்
கலந்தே சுரந்துகொண்டிருக்கிறது
என்கிணறு
இனிப்பிரித்து
தேவையானதை அருந்தவேண்டும்
என்பறவை
கொடியமிருகங்கள்
என்வனத்தில் அதிகமாய்
உலவிக்கொண்டிருக்கின்றன
என் பார்வை
இப்போது சாதுக்களை
நோக்கியே செல்கிறது
கடந்தகாலங்களைவிட
இப்போது நிறைய
முரண்பட்டிருக்கிறேன்
என் குடம் இப்போது
அமைதியை நோக்கியே
தழும்பிக்கொண்டிருக்கிறது!
நம்பமுடியவில்லையா?
என்மயானம்
எதிரே இருக்கிறது!

Leave a Reply