வானத்தில் இருளிலிருந்து இருளை நோக்கி….

க. பாலசுப்பிரமணியன்

 

இது என்ன பயணம்..

இருளிலிருந்து இருளை நோக்கி… ?

 

விடியலிலிருந்து மாலை வரை..

உழைத்து..

அனுபவித்து

அறிந்து..

புதிய ஞானத்துடன் ..

மாலையில் பயணத்தைத் தொடங்கினால்

அது மீண்டும் மீண்டும் ..

இருளுக்குள்…

 

காலம் பின்னோக்கிச் செல்ல..

மீண்டும் நேற்றைய விடியல்                                                                                                      v

இன்று…

 

ஆமாம்..

எங்கள் நாட்டு விடியல்கள்

நேற்றே நடந்துவிட்டாலும்

அனுபவங்களையும்..

மேதாவிலாசங்களையும் ..

நாங்கள் மண்ணில் புதைத்துவிட்டு.

 

மீண்டும் .,

அந்த அறிவை..

அனுபவங்களை ஜெனிக்க..

அதே விடியலையத் தேடி ..

கடல்களுக்கு அப்பால் ..

 

இது என்ன பயணம்?

இருளிலிருந்து இருளை நோக்கி..

நேற்றைய விடியலை..

மீண்டும் நாளைக்

காலையில் பிரசவிக்க …?

 

 

 

 

 

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *