கவிதை

விஜயகுமார் வேல்முருகன்

அடித்துக்கொள்ளும்
இதயத்தோடும்
துடித்துக்கொள்ளும்
இமைகளோடும்
காத்திருக்கின்றேன் வாசலில்.!

பிரசவ பார்க்கும் அறையது
பிரசவிக்கும் அவள்
உடலில் மட்டும் வலியோடும்
மனதில் மிகுந்த வலிமையோடும்
பிரசவிக்க காத்திருக்கிறாள்.!

பிரசவம் அறையின் வாசலில்
அவளின் நிலையில் நானும்
உடலில் மட்டும் வலிமையோடும்
மனதில் மிகுந்த வலியோடும்
பிரசவத்திற்காக காத்திருக்கிறேன்.!”

நொடிகள் கரைந்து நிமிடங்களாக
நிமிடங்கள் கரைந்து மணிகளாக
வேதனையின் முடிவின் அழுகை
பிரசவித்துவிட்டாள் குழந்தையை
நானும் எனது கவிதையை.!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *