( எம். ஜெயராமசர்மா …… மெல்பேண் …. அவுஸ்திரேலியா )

 

நடந்துநீ திரிந்தால் நலனுன்னைச் சேரும்

கிடந்துநீ இருந்தால் கிழடுன்னை நாடும்

பழங்களை உண்டால் பலனுன்னை சேரும்

இழப்புகழ் தவிர்க்க இயற்கையை நாடு !

 

பயிர்ச்சிகள் செய்தால் உயர்ச்சியைத் தொடுவாய்

அயர்ச்சிநீ அடைந்தால் முயர்ச்சிகள் விடுவாய்

தளர்ச்சியை தவிர்த்தால் தலை உயர்ந்திடுவாய்

வளர்ச்சியை  நினைத்து வாழ்வினை அமைப்பாய் !

 

போதனை கேட்டிடல் சாதனை ஆகுமே

வேதனை போக்கிட விரும்பிடு நீயுமே

மாதினை மயக்கத்தை வரையறை செய்திட்டால்

காசினி மீதிலே மாசின்றி வாழுவாய் !

 

இறைவனை எண்ணினால்

இன்புடன் வாழலாம்

குறையெலாம் அகன்றுநீ

நிறைவுடன் வாழலாம்

கறையுடை மனத்தினை

காணாமல் செய்திடில்

உலகினில் உன்னதம்

உன்னுளே உதித்திடும் !

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *