கவியோகி வேதம்

 

 

 குழந்தையாய் இருந்தான்,

 குடிக்க, தின்னப் பலவும் கேட்டான்,

 விளையாடப் பொம்மை,  கேம்ஸ்நோட் பேட்

 காசு எத்தனை..?அறியான்;

 தந்தையோ  குறித்தார்,

 கல்லூரிக்கு அனுப்பும் முன்;

.

 டாக்டராய் ஆகு,

 அதுவே உன் லட்சியம் என்றார்!

 டயரியில் குறித்த அவனுக்கான

 செலவிலே அவர் மனம்.!.

 அவன் இன்னும்  குழந்தையாய் இருந்தான்,

 அவருக்காய்ப் படித்தான்..வென்றான்

 செய்த செலவை அப்பன் ‘டயரியில்’- குறித்தான்.

.

 வசூலிக்கும் நேரத்தில்

 வக்கணையாய் வந்தது அவர்க்கே பெரும் நோய்!

 முதல் நோயாளி அவர் அவனுக்கு;

 அவன் காசு வசூலிக்கவில்லை..

 அதுபற்றி அவர்க்கே உறுத்தல்!

 சொல்லி மன்னிப்பாய் என்னும் முன்

 வாய் கோணியது.

 உடல் காடு ஏகியது;

 வெட்டியானோ இவன் டாக்டர்

 என அறிந்து பெரும் காசு கேட்டான்.

 அப்பனைப் பிழைக்க வைக்கமுடியாத் தண்டனையாய்

 அவனுக்கு இவன் கொடுத்தான்.

 கடைசி மூச்சில் டயரி நினைவு

 அப்பனுக்கு வந்தது அறியாதவனாய்..!

 

 *************************************************************

 

 

 

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.