சிவ .விஜயபாரதி

 

கனவுக் குதிரைகள் பூட்டியத் தேரில்
புவனத்தின் திசைக்குள்
இலக்கற்ற பயணம்
பெய்துவிட்டுப் போன மழையில்
நனைந்து நிற்கும் முட்செடிகள்
முட்களின் கூரிய முனைகள்
துளியைச் சுமந்தபடி
உச்சிக் கொம்பைப் பற்றிய தேன்கூடு
நிரம்பி உதிர்க்கிற துளிகள்
பழங்களைச் சிறுகச் சுவைத்து
மீண்டும் கடக்கின்றன
செடிகளின் பூக்களில் ஒழுகி
வழியில் பரவ
தேர்க்கால்கள் வழுக்குகின்றன
வியாபித்திருக்கும் கனத்த மௌனத்தினூடே
இருமருங்கும் உதிர்ந்து கிடக்கும் பூக்கள்
சொப்பனத்தைக் கலைத்துப் போடுகின்றன.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.