மலர்ந்த மனிதம்!

பவள சங்கரி

மனிதம் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஈரோட்டில் ஒரு நகராட்சிப் பள்ளியில் மாணவர்களை நன்கு படிக்கவும், 100 % வெற்றி பெறவும் மனிதாபிமானமிக்க, ஆக்கப்பூர்வமான முறையில் செயல்படுகிறார்கள் அப்பள்ளி ஆசிரியர்கள். ஆம், கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டிய மாணவர்களைத் தேர்ந்தெடுத்து மாலை நேர தனி வகுப்பு இலவசமாக எடுப்பதோடு, அந்த மாணவர்கள் சோர்வில்லாமல், உற்சாகமாக படிக்கவேண்டும் என்பதற்காக, அந்த ஆசிரியர்கள் தங்கள் சொந்தச் செலவில், அந்த குறிப்பிட்ட தேர்வுக் காலங்களில், ஒரு நாளைக்கு ஒரு ஆசிரியர் என்று மாணவர்களுக்கு சிற்றுண்டி (4 இட்லி/சட்னி/சாம்பார்) வாங்கிக்கொடுக்கிறார்கள். இன்னொரு மனிதாபிமான விசயம், அப்பள்ளியின் முன்னாள் மாணவர், இன்று ஒரு சிறிய உணவு விடுதியின் உரிமையாளர், ரூ 10 இட்லியை 5 உரூபாய்க்கு கொடுக்கிறார்! இதல்லவோ மனிதம்!

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *