ஈரோடு மாநகராட்சியில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் வார்டுதோறும் வாசகர்வட்டம்

0

                          த. ஸ்டாலின் குணசேகரன்

                                  தலைவர், மக்கள் சிந்தனைப் பேரவை.

_______________________________________________________

ஈரோடு

27.03.2017

ஈரோடு மாநகராட்சியில்

மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில்

வார்டுதோறும் வாசகர்வட்டம்

மக்கள் சிந்தனைப் பேரவை தொடங்கப்பட்டு 18 ஆண்டுகளாகின்றன. பேரவை தொடங்கப்பட்டதிலிருந்தே கல்வி, வாசிப்பு, சமூகச்சிந்தனை, சமூகசேவை ஆகியவற்றில் முழுகவனம் செலுத்திபல செயல்திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.

ஈரோடு புத்தகத் திருவிழாவை கடந்த 12 ஆண்டுகளாக மக்கள் சிந்தனைப் பேரவை நடத்தி வருகிறது. வாசிப்பை வலியுறுத்தி 12,500 கல்லூரி மாணவர்களின் மராத்தான் ஓட்டம், ‘ ஈரோடு வாசிக்கிறது ’ என்ற தலைப்பில் 15,000 மாணவர்கள் ஒரே இடத்தில் ஒருமணி நேரம் புத்தகவாசிப்பு, 20,000 மாணவர்கள் தங்கள் இல்லங்களில் ஒரு நூலகத்தைத் தொடங்க உறுதியேற்பு போன்ற வாசிப்பை வலியுறுத்தும் பல நிகழ்வுகளை பேரவை நடத்தியுள்ளது.

அடுத்தகட்டமாக ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 60 வார்டுகளில் மக்கள் சிந்தனைப் பேரவையின் சார்பில் ‘ வார்டுக்கு ஒரு வாசகர்வட்டம் ’ என்ற வகையில் தொடங்குவதென முடிவு செய்யப்பட்டுள்ளது.

வாசகர்வட்டம் தொடங்குவதற்கு குறைந்தபட்சம் 20 வாசகர்களும் அதிகபட்சம் 50 வாசகர்களும் இருக்கவேண்டும், மாதமொரு வாசகர்வட்டக் கூட்டம் நடைபெற்று மாதம் முழுவதும் உறுப்பினர்கள் வாசித்தவை குறித்து அதில் கலந்துரையாடுதல் போன்ற பல விதிமுறைகள் பேரவையால் வகுக்கப்பட்டுள்ளன.

தங்களது வார்டுகளில் வாசகர்வட்டம் தொடங்க எண்ணுவோர் அதற்கான படிவத்தைப் பெற A- 47, சம்பத் நகர், ஈரோடு – 638 011 என்ற முகவரியில் இயங்கும் மக்கள் சிந்தனைப் பேரவை அலுவலகத்தை அணுகி அதற்கான படிவங்களையும் ஆலோசனைகளையும் பெறலாம் என்று பேரவையின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

கூடுதல் விபரங்கள் www.makkalsinthanaiperavai.org என்ற இணையதளத்தில் உள்ளன. 0424 – 2269186, 88831 24443 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *