கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
”அதிகாலைப் போதினில் ஆவுக்(கு) அளிப்பு
குதிகாலை கோவிந்தக் கண்ணன் : -சதிகார
மாமன் அனுப்பிட மல்லாண்ட போதிலும்
காமம்(பிரியம்) இவருக்குக் கன்று’’….
கட்டு மயிற்பீலி கொண்டை யிலணிந்து
பட்டுப்பீ தாம்பரம் பூண்டாவை -வெட்ட
வெளிதனில் மேய்க்க வேய்ங்குழல் ஊதும்
களிமிகு கண்ணனே காப்பு….கிரேசி மோகன்….!