பெட்ரோலியப் பொருட்களுக்கு அன்றாட விலை நிர்ணயம்
பவள சங்கரி
மே 1 முதல் பாண்டிச்சேரி, விசாகப்பட்டினம், உதயபூர், ஜாம்ஷெட்பூர், சண்டிகார் ஆகிய ஐந்து நகரங்களில், அனைத்து பெட்ரோலியப் பொருட்களுக்கும் பரிட்சார்த்த முறையில் தினசரி விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது. பின் படிப்படியாக அனைத்து நகரங்களிலும் இந்த முறை தொடரும். 2012 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து மிகுந்த இலாபத்தை ஈட்டி வரும் இந்த நிறுவனங்கள் விலைவிதிப்பிலும் தனிக்கொள்கைகளை கடைபிடித்து போட்டிச் சந்தையை ஏன் உருவாக்குவதில்லை?