கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
பல்லில்லா பாலகன் என்றெண்ணி பூதனை
கொல்லவந்த கண்ணனைக் கண்டதும் -இல்லம்
புகுந்து முலைதிணித்துப் பார்த்திட வாய்க்குள்
முகுந்தனுக்கு முப்பத்தி மூணு’’(நமக்கு 32)….!
முலைகனத் தாயை அலைக்கழிய விட்டு
கொலைகுண பூதனை கொங்கை -மலைசுவைத்தோன்
அந்நஞ்சைப் பாம்பின்மேல் ஆடி ஜெரித்தவன்பால்
நன்நெஞ்சே நிற்பாய் நினைந்து….!
சூழ்ச்சி யுடன்வந்த பேய்ச்சி முலைபற்றி
மோட்ஷ விருந்தளித்த மோகனனை -மேய்ச்சலில்
கண்ணென கோகுலக் கன்றுகள் காத்திடும்
கண்ணனை நெஞ்சே கருது….கிரேசி மோகன்….!