பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளின் விபரீதம்

0

பவள சங்கரி

பன்னாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டிய காலமிது. வங்காளத்தில் அபாட் எனும் பன்னாட்டு மருந்து நிறுவனம் ஆண்டிற்கு 2,300 கோடி ரூபாய்க்கு உற்பத்தி செய்து சுமாராக 350 கோடி ரூபாய் இந்தியாவில் மட்டும் வருமானம் பார்க்கும் இந்நிறுவனம் காலாவதியான மருந்துகளை திரும்பப் பெற்றுக்கொள்ள மறுக்கின்றது. இப்படி காலாவதியான மருந்துகளை அழிப்பதற்கான முறைகளும் அவர்களிடமே உள்ளன. இது தொடர்பாக மேற்கு வங்காள அரசு அறிவுறுத்தியும் திரும்பப்பெற மறுக்கின்றது. இது தொடர்பாக உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்திடம் உத்தரகாண்ட் அரசு, மேற்கு வங்க அரசு, குஜராத் அரசு போன்றோர் புகார் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் அந்த பன்னாட்டு நிறுவனம் எடுக்கவில்லை என்பது உண்மை. இதுபோல பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியர்களுக்காக மட்டும் தனிப்பட்ட முறையில் வாகனங்கள், குளிர்பானங்கள், மின்னணு சாதனங்கள் போன்ற அனைத்தையும் மிக மட்டமாகத் தயாரித்து இந்தியாவின் வாங்குவோர் சந்தையையே குப்பையாக்கிவிடுகின்றனர். நாமும் கடைக்காரர்களையே மருத்துவர்களாக்கி அவர்கள் கொடுக்கும் மருந்தைக்கூட கண்ணை மூடிக்கொண்டு வாங்கிப் பயன்படுத்தி பின்விளைவுகளைச் சந்தித்தாலும் அது பற்றிய விழிப்புணர்வே இல்லாமல் இருக்கிறோம். இது பற்றி நடுவண் அரசோ அல்லது மாநில அரசோ எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதே வேதனைக்குரிய செய்தி. தமிழகச் சுகாதாரத் துறை அமைச்சரும், சுகாதாரத்துறை செயலரும் இதுகுறித்து எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை..

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *