விப்ரநாராயணன் 

news-yr2_CI
பிறந்தது புத்தாண்டு
இறந்தது நம் ஆணவமும் பேராசையும்
திறந்தது நம் உள்ளக் கதவு
பறந்தது பகைமை யாவும்

புயல் வந்தது புலம் பெயர்ந்தனர் மக்கள்
வயல்கள் மறைந்தன வாழ்வும் அழிந்தது
அயலார் எல்லாம் அண்மையில் வந்தனர்
தயக்கமின்றி தன்னுயிர் ஈந்து வாழ்வளித்தனர்

அரசியலில் மாற்றம் கண்டோம்
ஆட்சியில் ஏமாற்றம் கண்டோம்
அறவியலில் வளர்ச்சி கண்டோம்
ஆசிரமங்கள் வளரக் கண்டோம்
அறநெறி மறையக் கண்டோம்
அறிவியல் விண்ணைத் தொட்டது
அறிவோ மண்ணில் புதைந்தது
மதங்கள் யாவும் ஒன்றே என்றனர்
மனிதர்கள் யாவரும் ஒன்றே என்றனர்
ஆனால் சண்டையும் பூசலும் தினமும்தான்
எங்கும் தன்னலம் எதிலும் தன்னலம்
வாங்கும் பொருளிலும் கலப்படம்
ஆண்டுகள் பல சென்றன
ஆனந்தம் தேடி அலைகின்றனர் மக்கள்
ஆண்டவன் வருவேன் என்றான்
அதர்மத்தை அழிப்பேன் என்றான்
அதர்மத்தின் நாட்டியம்தான் எங்கும்
இராமன் வந்தார் கிருஷ்ணர் வந்தார்
இராமானுஜரும் சங்கரரும் வந்தார்
இராமகிருஷ்ணரும் விவேகானந்தரும் வந்தார்
காந்தி வந்தார் பாரதி வந்தார்
காணவில்லை மக்கள் மனதில் அமைதியை
காணவில்லை சத்தியமும் அன்பும்
காணவில்லை நாணயமும் நேர்மையும்

நம்புவோம் கண்ணன் வருவாரென்று
நம்புவோம் புதுயுகம் பிறக்க வருவாரென்று
நம்புவோம் நல்லவர்கள் வருவாரென்று
நம்புவோம் நல்லது செய்வாரென்று

பாரதநாட்டின் மாண்புகள் அழியாது காக்கவும்
பாரினில் அமைதியும் அன்பும் வேரூன்றவும்
பார்த்தனின் அருள்மொழிகள் பரவச் செய்யவும்
பார்த்தசாரதியை வணங்குவோம் நம்பிக்கையுடன்

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *