ராஜகவி ராகில்

 

 

என் சைகை கண்டு நிற்கிறது

மது குடித்த வண்டிபோல

விரைவாய் வந்த பேரூந்து

 

அவசரமாய்

ஏறிக்கொள்கிறேன் நான்

என் அருகில் வருகிறான் நடாத்துனர்

ஐம்பது ரூபாக் கொடுக்கிறேன்

நான் செல்லுமிடம் சொல்ல

அனுமதிச் சீட்டில் நாற்பது ரூபா எழுதியவன்

பத்து ரூபா தராமல் நகரும்போது மீதி நான் கேட்கிறேன்

பொய்யாகச் சொல்கிறான் இறங்கும் போது தருவதாய்

 

நான் இறங்குமிடம் வருகிறது

சில்லறையில்லை என்ற பதில் வாங்கியபடி

அவசரமாய் இறங்குகிறேன் பின் கதவு வழியாய்

 

என்னிடம் கை நீட்டுகிறான்

அந்நேரம் பார்த்து

அந்த வழி வந்த பிச்சைக்காரன்

அவன் முகத்தில் தெரிகிறான்

பேரூந்து நடத்துனர் .

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *