“செவ்வரத்தம் பூ!!”

 

320798_265797463459029_373147311_n

*********************************

கிராமத்துப் பூக்காரி
நீதான்!

மண்வாசனை வீசுவதால்
நீதான்
எங்கள் மண்ணின் மகாராணி!

சினிமாப் பாணியில்
சொல்வதானால்
நல்லதொரு நாட்டுக்கட்டை!

உனக்குக் கவர்ச்சி அதிகம்!
எத்தனை கூட்டத்துள்ளும்
கண்கள் உன்னையே தேடும்!

மூக்கும் முழியுமாக
முந்தானையால்
பாதிமுகம் மறைத்துச் சிரிப்பாய்
அற்புதம்!!

ஒற்றைக் கல்லு
மூக்குத்தியில் தான்
உன் அழகின் உச்சம்
இருக்கிறது!

வீட்டில் நிறைகுடம் வைத்தால்
சுமங்கலி நீதானே
முன் நிற்பாய்!

உச்சி முதல் பாதம்வரை
உன்னை ஒருமுறை
பார்த்தாலே போதும்
கண்களுக்கு அப்படி ஒரு குளிர்ச்சி!!

அது என்ன
உனக்கு மட்டும் விதி விலக்கு??

பெண்கள் வாடையே பிடிக்காத
பிள்ளையார்
உன்ன மட்டும் தன் தலையில்
தூக்கி வைத்திருக்கிறார்?

 

***************************************

சிறீ சிறீஸ்கந்தராஜா

13/08/2017

Share

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *