“வேர்களும் விழுதுகளும்” (2)
சிறீ சிறீஸ்கந்தராஜா
“ஈழத்து இலக்கியப் பரப்பு”
**********************************************
வைத்திய கலாநிதி
தியாகராஜ ஐயர் ஞானசேகரன்
(தி. ஞானசேகரன் – பகுதி-II)
*********************************
2004 ஞானம் பொன் மலர் எழுத்தாளர் தி.ஞானசேகரன் அவர்களை பிரதம ஆசிரியராகவும், புலோலியூர் க.சதாசிவம் அவர்களை இணை ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் கலை இலக்கிய மாத இதழின் 50வது இதழ்.
பேராசிரியர் சிவத்தம்பியுடனான நேர்காணல் இவ்விதழின் சிறப்பம்சமாக உள்ளது.
வீ.என்.சந்திரகாந்தி, திக்குவல்லை கமால், யோகேஸ் கணேசலிங்கம் ஆகியோரின் சிறுகதைகள் இதில் இடம்பெற்றுள்ளன.
கவிதைகளில், மாவை வரோதயன், சி.மௌனகுரு, ரூபராணி,
தவ சஜிதரன், சங்கீதா, இளைய அப்துல்லாஹ், தினகரன் ஆகியோரின் கவிதைகள் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.
இலக்கியக் கட்டுரைகள் ஏழு இடம்பெற்றுள்ளன.
பேராயர் எஸ்.ஜெபநேசன், கல்வயல் வே.குமாரசுவாமி, வ.இராசையா, துரை மனோகரன், புலோலியூரான், சுதர்சன், செ.யோகராசா ஆகியோரின் இலக்கியக் கட்டுரைகள்
இவ்விதழை அலங்கரிக்கின்றன.
2005 தி.ஞானசேகரன் சிறுகதைகள் 30 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
2005ம் ஆண்டில் வெளிவந்த சிறுகதைத் தொகுதிக்கான
நாவேந்தன் விருதினைப் பெற்றது.
2005 கார்த்திகேசு சிவத்தம்பி- இலக்கியமும் வாழ்க்கையும் . இலங்கை ஞானம் சஞ்சிகைக்கு பேராசிரியர் அளித்த நேர்காணல்களின் தொகுப்பு.
வேறு நேர்காணல்களில் சொல்லியிராத பல விடயங்களை
இந்த நேர்காணலிலே பேராசிரியர் சொல்லியிருக்கிறார்.
ஈழத்து நவீன இலக்கியத்துறையின் பிதாமகர்களில் ஒருவராக விளங்கும் பேராசிரியர் கடந்த 50 வருடகாலப் பகுதியில் ஈழத்து இலக்கியப் போக்கில் நிகழ்ந்த மாற்றங்கள், வளர்ச்சிப் போக்குகள், எழுச்சிகள், முரண்பாடுகள் என்பவற்றையெல்லாம் அனுபவ அடிப்படையில் வெளிப்படுத்தியுள்ளார்.
பேராசிரியரின் வாழ்க்கையின் பல பக்கங்களைத் தொட்டுச்செல்லும் இந்த நேர்காணல் ஓரளவுக்கு அவரது வாழ்க்கைச் சரிதம் போன்றும் அமைந்துள்ளது.
2005 கொக்கிளாய் மாமி – ஞானம் பரிசுக்கதைகள் 2005தொகுப்பு
ஞானம் கலை இலக்கியப் பண்ணை ஏற்பாட்டில் 2005ம் ஆண்டுக்கான கலாபூஷணம் க.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் பரிசுபெற்ற 12 சிறுகதைகளின் தொகுப்பு.
முல்லைமணி வே.சுப்பிரமணியம்,
மாதுமை சிவசுப்பிரமணியம்,
டாக்டர் ச.முருகானந்தன்,
தம்பு-சிவா,
புனிதகலா,
நவஜோதி ஜோகரட்னம்,
மு.சந்திரகாந்தா,
த.அஜந்தகுமார்,
தாட்சாயணி,
டி.ஜனார்த்தனன்,
சிவனு மனோகரன்,
எஸ்.உதயச்செல்வன்
ஆகிய எழுத்தாளர்களின் பரிசுபெற்ற சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
எழுத்தாளர் பற்றிய சுருக்கக் குறிப்பும் ஒவ்வொரு கதைக்கு முன்னும் இடம்பெற்றுள்ளது.
2006 சிறைப்பட்டிருத்தல் – ஞானம் பரிசுக்கதைகள் 2006 தொகுப்பு. ஞானம் கலை இலக்கியப் பண்ணையின் ஏற்பாட்டில் புலோலியூர் சதாசிவம் ஞாபகார்த்தப் போட்டியில் 2006ம் ஆண்டுக்கான பரிசினைப்பெற்ற 12 சிறுகதைகளின் தொகுப்பு.
புதிய தலைமுறைப் படைப்பாளிகள் பன்னிருவரின் கதைகள் அடங்கியது.
புலோலியூர் செ.கந்தசாமி,
ஏ.கே.குணநாதன்,
கார்த்திகா பாலசுந்தரம்,
என்.ஏ.தீரன்,
கே.எஸ்.சுதாகர்,
ம.பா.மகாலிங்கம்,
ஆ.புனிதகலா,
பிரமிளா செல்வராஜா,
நவஜோதி ஜோகரட்ணம்,
பொன்னம்பலம் சுதாகர்,
தர்மராஜா அஜந்தகுமார்,
சிவனு மனோகரன்
ஆகியோரின் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
2007 பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி பவளவிழா மலர் நவீன இலக்கியச் செல்நெறியில் ஆழத்தடம் பதித்த பேராசிரியர் கா.சிவத்தம்பியின் 75ஆவது அகவை நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட பவள விழா மலர்.
பேராசிரியரின் பன்முகத் திறமைகளை பல்வேறு தளங்களில் விமர்சிக்கும் கட்டுரைகள் இம்மலரை நிறைத்துள்ளன.
சி.மௌனகுரு,
அ.சண்முகதாஸ்,
எஸ்.சந்திரசேகரன்,
பெ.மாதையன்,
நாகராச ஐயர் சுப்பிரமணியன்,
செ.யோகராசா,
க.இரகுபரன்,
அ.முகம்மது சமீம்,
வே.விமலராஜா,
தெணியான்,
செங்கை ஆழியான்,
அ.இரவி,
எஸ்.மேசேஸ்,
அந்தனி ஜீவா,
எஸ்.எச்.எம்.ஜெமீல்,
ஆகியோரின் கட்டுரைகளும் ஞானம் நேர்காணலின் சில பகுதிகளும் இம்மலரில் மணம் பரப்புகின்றன.
நூலின் இறுதியில் பேராசிரியரின் வாழ்வும் பணியும் பற்றிய சுருக்கக் குறிப்பும் காணப்படுகின்றது.
2007 போர்க்காலக் கதைகள்.
அரை நூற்றாண்டுக்கால போர்க்கால வரலாற்றைச் சித்திரிக்கும் 20 கதைகளைத் தொகுத்து இந்நூலை உருவாக்கியிருக்கிறார்.
போரின் பல்வேறு வகைப்பட்ட தாக்கங்களை வெவ்வேறு பிரதேசங்களைச் சார்ந்த படைப்பாளிகளின் பன்முகப்பட்ட பார்வையில் தொகுப்பாசிரியர் தேர்ந்து பதிவு செய்திருக்கின்றார்.
டிலான் ஜெயந்தன்,
ராணி ஸ்ரீதரன்,
தி.ஞானசேகரன்,
புலோலியூர் செ.கந்தசாமி,
ஓ.கே.குணநாதன்,
தாமரைச் செல்வி,
சுதர்ம மகாராஜன்,
குமுதினி கலையழகன்,
முல்லையூரான்,
யோகேஸ்வரி சிவப்பிரகாசம்,
வதிரி சி.இராஜேஸ்கண்ணன்,
செங்கை ஆழியான்,
ச.முருகானந்தன்,
முல்லைமணி,
தாட்சாயணி,
கே.விஜயன்,
முத்து,
நீரங்க விக்ரமசிங்க,
லோ.சுதர்மன்,
சந்திரகாந்தா முருகானந்தன்
ஆகிய இருபது படைப்பாளிகளின் கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
2008 ஞானம்- 100 ஈழத்து நவீன இலக்கியச் சிறப்பிதழ் .
06.06.2000 அன்று தனது முதலாவது இதழை வெளியிட்டுவைத்த ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் 100ஆவது இதழ் ஈழத்து நவீன இலக்கியச் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது.
தாயகத்திலும் புகலிடத்திலும் வாழும் படைப்பாளிகளை எவ்வித வேறுபாடுகளுமின்றி அரவணைத்துப் பயணிக்கும் இச்சஞ்சிகையின் 100ஆவது இதழில்,
42 இலக்கியக் கட்டுரைகளும்,
33 கவிதைகளும்,
ஒரு நாடகமும்,
16 சிறுகதைகளும் இடம்பெற்றுள்ளன.
கௌதமன், மதிபுஷ்பா ஆகியோரின் ஓவியங்கள் படைப்புக்களை அலங்கரிக்கின்றன.
2009 கருமுகில் தாண்டும் நிலவு .
கலாபூஷணம் புலோலியூர் க.சதாசிவம் ஞாபகார்த்தச் சிறுகதைப் போட்டியில் 2007ம் ஆண்டு பரிசுபெற்ற படைப்பாளிகளின் சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.
கருமுகில் தாண்டும் நிலவு (கார்த்திகாயினி சுபேஸ்),
ஒடுக்கம் (கார்த்திகா பாலசுந்தரம்),
கற்றுக்கொள்வதற்கு (கே.எஸ்.சுதாகர்),
நான் சாகமாட்டேன் (ச.முருகானந்தன்),
மீளாமகன் (தர்மராஜா அஜந்தகுமார்),
பாடமாத்தி (சிவனு மனோகரன்),
கல்லடிப் பாலம் (தீரன்-ஆர்.எம்.நௌசாத்),
அறம்செய்ய (ஆவூரான்),
தவம் கலைகிறது (கேணிப்பித்தன் ச.அருளானந்தம்),
தேடல் (கயிலை-தம்பையா கயிலாயர்),
ஒரு நாள் (பிரமிளா பார்த்திபன்),
கனவு கனவாயே (நிரஞ்சனி சபாரத்தினம்)
ஆகிய பன்னிரு பரிசுச் சிறுகதைகள் இத்தொகுதியில் இடம்பெற்றுள்ளன.
2011 சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு:
கட்டுரைக் கோவை (இணைப்பதிப்பாசிரியர்)
2011 ஜனவரி 6,7,8,9 ஆம் திகதிகளில் கொழும்பில் நடைபெற்றிருந்த சர்வதேச தமிழ் எழுத்தாளர் விழாவின் பல்வேறு கருத்தரங்குகளில் சமர்ப்பிக்கப்பட்ட 32 ஆய்வுக் கட்டுரைகளின் தொகுப்பு.
இதில் 3ஆவது கட்டுரையாக என்.செல்வராஜா எழுதிய “ஈழத்தமிழரின் நூல்களை ஆவணப்படுத்துவதில்
நூல்தேட்டத்தின் பங்களிப்பும் அது எதிர்கொள்ளும் சவால்களும்” என்ற தலைப்பிலான விரிவான ஆய்வும்இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2012 நகுலநாதம் (துணைவியாருடன் இணந்து வெளியிட்டது)
24.3.2012 அன்று வெளியிடப்பெற்ற கீரிமலை நகுலேஸ்வரம் ஆலய கும்பாபிஷேக மலர்.
பாயிரவியல்,
வாழ்த்தியல்,
வரலாற்றியல்,
கிரியாவியல்,
மெய்யியல்,
இசையியல்,
மீட்பியல்,
பதிவியல்,
(எழுத்துரு/ஒளியுரு) ஆகிய எட்டுப் பிரிவுகளின் கீழ் பல்வேறு ஆய்வுக்கட்டுரைகளை உள்ளடக்கிய பாரிய மலர் இதுவாகும்.
2012 ஞானம் 150 ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழ்.
தமிழிஇலக்கியப் பரப்பில் இது ஒரு புதிய இலக்கியப்பதிவு!!
இதுவரை இத்தகைய “போர்க்கால இலக்கியம்” என்ற சொற்றொடரே ஞானம் இதழில் தான் அறிமுகமாகிறது.
06.06.2000 அன்று தனது முதலாவது இதழை
வெளியிட்டுவைத்த ஞானம் கலை இலக்கியச் சஞ்சிகையின் 150ஆவது இதழ் ஈழத்துப் போர் இலக்கியச் சிறப்பிதழாக
600 பக்கங்களில் வெளிவந்துள்ளது.
150ஆவது இதழில், ஈழத்தின் போர்க்காலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும், பதிவுசெய்யும் கருத்தாடல்கள், நேர்காணல்கள், கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள் என்பன இடம்பெற்றுள்ளன.
சிவா கௌதமனின் ஓவியங்கள் படைப்புக்களை அலங்கரிக்கின்றன.
இந்நூலின் இறுதியில் என்.செல்வராஜா எழுதிய
ஈழத்தமிழரின் போர்க்காலப் பிரசுரங்களும் போராட்ட இலக்கியங்களும் என்ற சிறப்புக் கட்டுரை (பக்.553-600) இடம்பெற்றுள்ளது.
2013 வட இந்திய பயண அனுபவங்கள்.
ஞானம் பதிப்பகத்தின் 27ஆவது வெளியீடாகவும்,
3வது பயண இலக்கியமாகவும் இந்நூல் வெளிவந்துள்ளது.
கங்காஸ்நானம், திரிவேணி சங்கம ஸ்நானம், கேதார்நாத், பத்ரிநாத், காசி விசவநாதர் தரிசனம் ஆகியவை பற்றி அவர் விபரிக்கின்றபோது
நாமும் ஸ்நானம் செய்து, தரிசனம்காணும் பேறு பெறும் வகையில் அவர் விபரித்துச் செல்கின்றார்.
மற்றையது ஒரு யாத்திரிகன் என்ற தளத்தைத் தாண்டி ஒரு படைப்பாளியின் மனோபாவத்துடன் அவர் இவ்விலக்கியத்தைப் படைத்துள்ளார்.
புராண இதிகாச சம்பவங்களையும் பொருத்தமுற விபரித்துச் செல்லும் அவர், செல்லும் வழி, தூரம், பிரயாண ஊடகம்,
தங்குமிட வசதி, முதலிய விடயங்களையும் ஆங்காங்கே பதிவுசெய்கிறார்.
இப்பயண இலக்கியம் டில்லியையும் அதனைச் சூழவுள்ள வரலாற்று முக்கியத்துவமான இடங்களான தாஜ்மஹால்,
ஜெய்ப்பூர் அரண்மணை, ஆக்ரா கோட்டை, கிருஷ்ணரின் ஜனனபூமியான மதுரா ஆகிய இடங்கள் பற்றியும் அங்கே ஆசிரியரின் அனுபவங்களையும் பதிவு செய்கின்றது.
2013 ஞானம் – தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் சிறப்பு மலர்.
ஞானம் இதழின் 159ஆவது இதழ் தனிநாயகம் அடிகளாரின் நூற்றாண்டுச் சிறப்பு மலராக வெளிவந்துள்ளது.
சபா.ஜெயராசா,
எஸ்.சிவலிங்கராஜா,
பேராயர் எஸ்.ஜெபநேசன்,
சு.சுசீந்திரராஜா,
சி.தில்லைநாதன்,
செ.யோகராசா,
அருட்திரு தமிழ்நேசன் அடிகளார்,
க.இரகுபரன்,
சந்திரசேகரம் சசீதரன்,
வசந்தி தயாபரன்,
ஆகியோரின் ஆய்வுக் கட்டுரைகளும், வாகரைவாணனின் தமிழுக்கொரு தனிநாயகம்
என்ற கவிதையும் இச்சிறப்பு மலரில் இடம்பெற்றுள்ளன.
2013 எனது இலக்கியத் தடம் (1ம் பாகம்)
ஞானம் பதிப்பகத்தின் 26ஆவது வெளியீடாக வெளிவந்துள்ள நூல்.
ஞானம் சஞ்சிகையின் ஆசிரியரான வைத்திய கலாநிதி
தியாகராஜ ஐயர் ஞானசேகரன் அவர்கள் இந்நூல்வழியாகத்
தனது இலக்கியப் பயணத்தை படிமுறையாக விளக்கிச் செல்கின்றார்.
முன்னர் ஜீவநதி இலக்கியச் சஞ்சிகையில் தொடராக இது வெளிவந்தது.
2013 சாகித்தியரத்னா செங்கை ஆழியான் நேர்காணல்
இலங்கை அரசின் உயர்விருதான சாகித்திய ரத்னா விருதினைப் பெற்ற ஈழத்துப் படைப்பிலக்கியவாதியான செங்கை ஆழியான் க.குணராஜாவுடன், ஞானம் சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் வைத்திய கலாநிதி தி.ஞானசேகரன் ஒரு விரிவான நேர்காணலை மேற்கொண்டு ஞானம் சஞ்சிகையில் அதனைத் தொடராகப் பிரசுரித்திருந்தார்.
அதன் நூல்வடிவம் இதுவாகும்.
46 நாவல்களையும், ஆறு சிறுகதைத் தொகுதிகளையும்,
8 பல்சுவைக் கட்டுரைகளையும் பல்வேறு தொகுப்பு நூல்களையும் இதுவரை தந்தவரான செங்கை ஆழியானின் படைப்பிலக்கியப் பணி இன்னமும் தடையின்றித் தொடர்கின்றது.
இந்நேர்காணல் வழியாக அவரது இலக்கியத்தேடலின் ஆழமும் அகலமும் வெளிக்கொணரப்பட்டுள்ளன.
வேர்களும் விழுதுகளும் இன்னும் வளரும்….
****************************************************
சிறீ சிறீஸ்கந்தராஜா
16/08/2017