பறவை மோதிய தடம்?
இல.பிரகாசம்
ஆகாயத் தாமரைகள்
அலைகளோடு
வேரூன்றி வாழப் பழகிக் கொண்டன
போலும்!
இரட்டைத் துடுப்புகளுக்கு
இனிய வரவுகளை காட்டுகின்றன
அப்போதும் அலைகள்
முன்னோக்கிச் செல்கின்றன!
ஏரியில் தனியனாய் நான்!
“நான்” புறவெளி
சிந்தை அலைகளின் மீது!
ஒரு பறவை தன் சிறகுகளால்
அலையை மோதிய தடம எங்கே?