மூலம் : பீட்டில்ஸ் பாடகர்
தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா
வீட்டுக் குள்ளே என்னைப்
பூட்டி வைப்பாய் !
பகற் பொழுதை நான் பார்க்க
அனுமதி தராதே !
இங்கே எப்படி நான் தனிமையில்
மறைந்து வாழ்வது ?
பிறர் என்ன சொல்கிறார் என்று
கவலைப் படேன் !
காதலி இல்லாத உலகில் நான்
வாழ விரும்பிலேன்.
காத்தி ருப்பேன் சில காலம் !
உண்மைக் காதலி வரலாம்
ஒருநாள்,
எப்போ தென்று நான் அறியேன்.
அப்படி அவள் வந்தால்
அறிவேன் நானதை !
புள்ளினம் இசை எழுப்பும்.
மழைமுகில் நிலவினை
மறைக்கும் !
இங்கே கிடப்பேன்
என் ஏகாந்த நிலையில் !
அதுவரை என்னைப் பூட்டி வை.
அனுமதி தராதே
பகற் பொழுதைப் பார்க்க !
காதலி இல்லா உலகில் நான்
வாழ விரும்பிலேன் !


Leave a Reply