மூலம் : பீட்டில்ஸ் பாடகர்

தமிழாக்கம் : சி. ஜெயபாரதன், கனடா

jayabarathan 

 

 

 

 

 

 

 

 

 

வீட்டுக் குள்ளே என்னைப்

பூட்டி வைப்பாய் !

பகற் பொழுதை நான் பார்க்க

அனுமதி தராதே !

இங்கே எப்படி நான் தனிமையில்

மறைந்து வாழ்வது ?

பிறர் என்ன சொல்கிறார் என்று

கவலைப் படேன் !

காதலி இல்லாத உலகில் நான்

வாழ விரும்பிலேன்.

காத்தி ருப்பேன் சில காலம் !

உண்மைக் காதலி வரலாம்

ஒருநாள்,

எப்போ தென்று நான் அறியேன்.

அப்படி அவள் வந்தால்

அறிவேன் நானதை !

புள்ளினம் இசை எழுப்பும்.

மழைமுகில் நிலவினை

மறைக்கும் !

இங்கே கிடப்பேன்

என் ஏகாந்த நிலையில் !

அதுவரை என்னைப் பூட்டி வை.

அனுமதி தராதே

பகற் பொழுதைப் பார்க்க !

காதலி இல்லா உலகில் நான்

வாழ விரும்பிலேன் !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *