Tamil-Daily-News-Paper_96768915654

ஆவணியஸ்தம் தொடங்கிய திருவோணத் திருவிழவில்..
…………அரியுருவாகி அரியைழிந்தவனுக்கோர் அற்புத விழாவாம்.!
தாவணியில் பெண்கள்தனை பட்டாடையால் அலங்கரித்து..
…………மண்ணுக்குள் மாய்ந்த மாவலியையழைக்கும் விழாவாம்.!
தாரணியெங்கும் தசநாட்கள் கொண்டாடும்…மாவலியாமவன்..
…………மூன்றாவதடிக்கு முன்னந்தலையைக் காட்டிய விழாவாம்..!
பேரணியாய் மகிழ்வுடனே திரளுவாரங்கே மாவலிராஜாவின்..
………..பெருவரவென்று..!பெருவிருந்தான “ஓணசத்யா” உணவுடன்.!

காம்பொடுகூடிய கடிமலர்கள் எல்லாம் பெருங்கூட்டமாய்..
…………காரணத்தோடு…தோவாளை யெனுமிடத்திற்கு கடுகிவருமாம்.!
கூம்பின்வடிவாய் ஆங்காங்கே வந்தமலர்க் கூட்டமெலாம்..
…………குவியலாய் வாசல்தோறுமங்கே கோலமா யலங்கரிக்குமாம்.!
ஆம்பல் மலர்நிறத்தில் வானமுமேகமும் வாழ்த்த..வெள்ளை..
…………ஆடையுடித்திய இளமங்கையரெலாம் கூடுவரங்கே..விருந்..
தோம்பலே வாமனாவதாரத்தின் பிரதான நோக்கமாகுமாமது..
…………திருமாலைப் போற்றும் திருவோணமெனும் பெருவிழாவாம்.!
=========================================================

 
நன்றி:: படம்..தினகரன்_2012
வல்லமை அன்பர்கள் அனைவருக்கும் “ஓணம் பண்டிகை நல்வாழ்த்துக்கள்”.
அன்புடன்
பெருவை பார்த்தசாரதி

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *