கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்
அயிகிரி நந்தினி மெட்டில் பெருமாளின் த்வாதச நாமத் துதி….
“கேசவாய , நாராயணாய ,மாதவாய, கோவிந்தாய , விஷ்ணுவே ,திரிவிக்ரமாய, வாமனாய,சீதராய ,ரிஷிகேசாய ,பத்பனாபாய ,தாமோதராய ,மதுசுதனாய”…..
“அளிவரம் முக்ரமம் ஒளியரி அக்ரமம்
உணர்குரு சுக்கிரர் கட்டளையை
பலியிட அக்கணம் குறள்திரு விக்ரம
வடிவினில் திக்கது தொட்டனனே
புலனுரு வாமனம் பழகிட நீமனம்
பெருகுவை ஆணவ கந்தையிலே
சலணரு ணேசரின் சிசுரம ணேசரை
சரணடை கோவண சந்நிதியில்”….!
ஹரிஹரி கோ குலபாலக கோபியர் காதல காவல கேளி சுதே….
சேணம் பிடித்தைவர் சேனை ஜெயித்திட
வானத்து வைகுண்டம் விட்டகன்ற -ஓணத்தன்
வாத புரீசன் வடமதுரா மன்னவன்
கீதகோ விந்தந்தாள் காப்பு….!
களித்தெமுனா தீரத்தில் கோபியர் சூழ
குளித்தவர் காமத்தைக் கொன்று -அளித்தனன்
ஞானத்தை; அந்தநந்த நீலத்தை நாம்வணங்கி
ஓணத்தில் கொள்வோம் உவப்பு….!
வானத்தை மண்ணை வரமாய் பலிதந்த
தானத்தை அன்றளந்த தெய்வத்தை -ஓணத்து
வாமனக் குட்டனை வாத புரீசனை
நீமனக் கட்டில் நிறுத்து….!
கலிமுடிவில் ஓரடியை ஆலிலையில் உண்டாய்
பலிமுடியில் வேறடியை வைத்தாய் -தெளிவடைய
நூற்றிடுவேன் வெண்பாக்கள் நீர்வண்ணா வாழ்த்திடுவாய்
ஈற்றடி யாக இருந்து….!கிரேசி மோகன்….!