வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் கவிதைகள்

0

க. பாலசுப்பிரமணியன்

4677627d8477923052e60ee2dfdeb4dd

குழந்தையே மனிதனின் தந்தை

(வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்- ஆங்கிலக் கவிஞரால் 1802 மார்ச் மாதம் எழுதப்பட்டு 1807ம்  பிரசுரிக்கப்பட்ட கவிதை )

தமிழாக்கம் : க. பாலசுப்ரமணியன்

வானவில்லைப் பார்க்கும்பொழுதெல்லாம்

என் மனம் ஏனோ துள்ளி எழுகின்றது !

என் வாழ்க்கை ஆரம்பித்த பொழுதும் அப்படித்தான்;

இன்று நான் ஒரு முழு மனிதனாக வளர்ந்தபின்பும்

நாளை என் முதுமையிலும் கூட,

இல்லையென்றால், மரணம் என்னைத் தழுவட்டும் !

குழந்தையே மனிதனின் தந்தை !

நான் விரும்புவதெல்லாம் என் வாழ்க்கை

நாளொருவண்ணமும் இயற்கையோடு கைகோர்த்து

ஒரு வண்ணத்துப்பூச்சிக்கு …( TO A BUTTERFLY)

(வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்- ஆங்கிலக் கவிஞரால் 1802 மார்ச் மாதம் எழுதப்பட்டு 1807ம்  பிரசுரிக்கப்பட்ட கவிதை )

தமிழாக்கம் : க. பாலசுப்ரமணியன்

என்னோடு தங்கிவிடு – பறந்து செல்லாதே !

இன்னும் சற்று  நேரம் என் பார்வையில் !

என் குழந்தைப் பருவத்தின் சரித்திர ஆசிரியனே

உன்னோடு நான் நிறையப்  பேச வேண்டும் !

என் அருகில் மிதந்து கொண்டிரு; பறந்து விடாதே !

எனது கடந்த காலம் உன்னிடம் மீண்டும் பிறக்கின்றது;

உன்னைப்  போன்ற மகிழ்வான சீவன்களின் நினைவு வருகின்றது !

எனது குடும்பத்தின் நினைவும்

உயிர்ப்புள்ள நினைவுகளும் மீண்டும் என் மனதில் !

ஓ ! எத்தனை மகிழ்வான நினைவுகள்,

குழந்தைப் பருவத்தில் விளையாடிய அந்த நாட்கள் !

எனது சகோதரி எம்மாலினும் நானும்

எத்தனை வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்தினோம் !

ஒரு வேடனைப் போல நான் வேகமாக

இரையைத் தேடி – குதித்துக் குதித்து

ஆனால் அவளோ – இறைவன் அவளை ஆசீர்வதிக்கட்டும் !

சிறகுகளில் படிந்த தூசிகளை தட்டிவிடப் பயந்தாளே !

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *