வில்லியம் வோர்ட்ஸ்வொர்த் கவிதைகள்
க. பாலசுப்பிரமணியன்
குழந்தையே மனிதனின் தந்தை
(வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்- ஆங்கிலக் கவிஞரால் 1802 மார்ச் மாதம் எழுதப்பட்டு 1807ம் பிரசுரிக்கப்பட்ட கவிதை )
தமிழாக்கம் : க. பாலசுப்ரமணியன்
வானவில்லைப் பார்க்கும்பொழுதெல்லாம்
என் மனம் ஏனோ துள்ளி எழுகின்றது !
என் வாழ்க்கை ஆரம்பித்த பொழுதும் அப்படித்தான்;
இன்று நான் ஒரு முழு மனிதனாக வளர்ந்தபின்பும்
நாளை என் முதுமையிலும் கூட,
இல்லையென்றால், மரணம் என்னைத் தழுவட்டும் !
குழந்தையே மனிதனின் தந்தை !
நான் விரும்புவதெல்லாம் என் வாழ்க்கை
நாளொருவண்ணமும் இயற்கையோடு கைகோர்த்து
ஒரு வண்ணத்துப்பூச்சிக்கு …( TO A BUTTERFLY)
(வில்லியம் வோர்ட்ஸ்வொர்த்- ஆங்கிலக் கவிஞரால் 1802 மார்ச் மாதம் எழுதப்பட்டு 1807ம் பிரசுரிக்கப்பட்ட கவிதை )
தமிழாக்கம் : க. பாலசுப்ரமணியன்
என்னோடு தங்கிவிடு – பறந்து செல்லாதே !
இன்னும் சற்று நேரம் என் பார்வையில் !
என் குழந்தைப் பருவத்தின் சரித்திர ஆசிரியனே
உன்னோடு நான் நிறையப் பேச வேண்டும் !
என் அருகில் மிதந்து கொண்டிரு; பறந்து விடாதே !
எனது கடந்த காலம் உன்னிடம் மீண்டும் பிறக்கின்றது;
உன்னைப் போன்ற மகிழ்வான சீவன்களின் நினைவு வருகின்றது !
எனது குடும்பத்தின் நினைவும்
உயிர்ப்புள்ள நினைவுகளும் மீண்டும் என் மனதில் !
ஓ ! எத்தனை மகிழ்வான நினைவுகள்,
குழந்தைப் பருவத்தில் விளையாடிய அந்த நாட்கள் !
எனது சகோதரி எம்மாலினும் நானும்
எத்தனை வண்ணத்துப் பூச்சிகளைத் துரத்தினோம் !
ஒரு வேடனைப் போல நான் வேகமாக
இரையைத் தேடி – குதித்துக் குதித்து
ஆனால் அவளோ – இறைவன் அவளை ஆசீர்வதிக்கட்டும் !
சிறகுகளில் படிந்த தூசிகளை தட்டிவிடப் பயந்தாளே !