முனைவர் சு.சத்தியா
உதவிப்பேராசிரியர், தமிழ்த்துறை
பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரி
தஞ்சாவூர்

 
இதயத்தில் ஈரமுள்ளவர்கள் வாழ்வால் – அன்று
வயலில் ஈரமிருந்தது
இன்றோ இதயத்தில் ஈரமற்றவர்கள் செயலால்
வயலில் ஈரம் வற்றியது
கழனிகள் புறவழிச்சாலைகளாயின
சோலைகள் மயானமாயின
கலப்பை ஏந்தியவன் கதியற்றவனானான்
இயற்கையோடு இயைந்த வாழ்வு – இன்று
செயற்கையாகிப் போனது
நமக்குள் ஒற்றுமையின்மையால்
பூமியும் பிளவுப்பட்டு நிற்கிறது
நாம் பொறுமையை இழந்துப் போனதால்;
கடலும் பொங்கி எழுகிறது
நம் மனம் தூய்மையற்றுப் போனதால்
காற்றும்கூட மாசடைந்துப் போனது
வஞ்சகத்தை நெஞ்சத்துள் குடிகொள்ளவிட்டதால்
எரிமலையும் வெடித்து சிதறுகிறது
கருணை காட்ட தவறியதால்
ஆகாயமும் நம்மை கதிகலங்கவைக்கிறது
நாம் நாமாக இருந்தால்
ஏன்? இந்த மாற்றம் – பின்னே
ஏன்? இந்த ஏமாற்றம்!……

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *