து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

மீண்டும் தஞ்சைக்கோயிலின் ஓரிரு கல்வெட்டுகளைக் காண்போம்.

இவை, கோயிலின் சுற்று மாளிகையின் தூண்களில் இருப்பன. விமானத்தின்
அதிட்டானப்பகுதியில் உள்ள கல்வெட்டுகளைக்காட்டிலும் இவற்றில் அழகும் திருத்தமும் குறைவு.

கல்வெட்டு-1

பதினாறு வரிகள் கொண்ட இக்கல்வெட்டு, தூணின் ஒரு முகத்தில் உள்ளது. கொடையாளி, இறைவரின் செப்புத்திருமேனி ஒன்றையும் அதன் பீடத்தையும் அளித்து, உருத்திராக்கம் (ருத்ராக்‌ஷம்) ஒன்றைப் பொன்கொண்டு பொதித்தளித்திருக்கிறார்.

கல்வெட்டின் படத்தை உருப்பெருக்கம் செய்து எழுத்துகளைச் சற்றே
ஊன்றிப்பார்த்துப் படிக்க. கல்வெட்டின் பாடம் கீழே தரப்பட்டுள்ளது.

தஞ்சை-தூண் கல்வெட்டு-1

1 விரல் நீளத்து எ
2 ண் விரல் அகலத்
3 து எண் விரலுசர
4 த்து பத்மத்தோடு
5 ங்கூடச்செய்த பீ
6 டம் ஒன்று இவ
7 னே இவர்க்குக்
8 குடுத்தன ருத்ரா
9 க்‌ஷம் ஒன்றிற் கட்
10 டின பொன் ஏழு ம
11 ஞ்சாடி உட்பட ருத்ரா
12 க்‌ஷம் ஒன்று நிறை அ
13 ரைக் கழஞ்சே நா
14 லு மஞ்சாடியுங் கு
15 ன்றிக்கு விலை காசு
16 ஒன்று

குறிப்பு:
1 செப்புத்திருமேனியின் நீள,அகல, உயரங்கள் தரப்பட்டுள்ளன. உசரம்=உயரம்
(யகர, சகர மயக்கம்.)
விரல்-பெருவிரல் அளவு.
12 விரல்=ஒரு சாண்.

2 பொன்னின் நிறை கழஞ்சு, மஞ்சாடி ஆகிய அளவுகளில் சொல்லப்பட்டிருக்கிறது.
மஞ்சாடி= இரண்டு குன்றிமணி எடை
20 மஞ்சாடி= ஒரு கழஞ்சு

3 நீல வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகளைக்குறிப்பன.
( பத்ம பீடம், ருத்ராக்‌ஷம்)

கிரந்தம்

கல்வெட்டு-2

இதுவும் ஒரு தூண் கல்வெட்டு. இருபத்து நான்கு வரிகளை
உடையதாய் முழுச்செய்தியைச் சொல்லும் கல்வெட்டு. ஆறு படங்களாகக்
காட்டப்பட்டுள்ளது. எழுத்துகளைப்படிக்கும் பயிற்சிக்கு உகந்தது எனக்கருதுகிறேன். முதலாம் இராசராசனின் அதிகாரிகளுள் புரவுவரித் திணைக்களம் என்னும் துறையில் வரிப்பொத்தக நாயகன் என்னும் பதவியிலிருக்கும் காஞ்சன கொண்டையன் என்பவன் தஞ்சைக்கோயிலின்
சிறு தேவதைகளுக்கான பரிவாரக்கோயிலில் கணபதிப்பிள்ளையார்க்கு
இருபத்தொன்பது பலம் நிறையுள்ள வெண்கலத் தளிகையைக் கொடையாக
அளித்த செய்தியைக்கல்வெட்டு தெரிவிக்கிறது.

முதல் படம்:

Kalvettu73

பாடம்:
ஸ்வஸ்திஸ்ரீ உடை
யார் ஸ்ரீ ராஜராஜீ
ச்0வரம் உடையா

இரண்டாம் படம்:

Kalvettu74

பாடம்:
ர் கோயிலில் பரி
வாராலயத்துப்
பிள்ளையார் க3ண
பதியார்க்கு உடை

மூன்றாம் படம்:

Kalvettu75

பாடம்:
யார் ஸ்ரீ ராஜராஜ
தே3வர் பணிமக
ன் புரவுவரி திணை

நான்காம் படம்:

Kalvettu76

பாடம்:
க்களத்து வரிப்பொ
த்தக நாயகன் பா
ண்ட்3ய குலாச0நி
ள நாட்டுப் புறக்கிளி
யூர் நாட்டுக் காமத

ஐந்தாம் படம்:

Kalvettu77

பாடம்:
மங்கலமுடையா
ன் காஞ்சன கொண்
டையன் உடையார் ஸ்ரீ
ராஜராஜதே3வர்க்கு யா

ஆறாம் படம்:

Kalvettu78

பாடம்:
ண்டு இருபத்தொன்ப
தாவது வரை குடுத்த
வெண்கலத்தளிகை
ஒன்று நிறை இருப
த்தொன்பதின் பலம்

குறிப்பு:
1 நீல வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகளைக்குறிப்பன.
2 புரவுவரித் திணைக்களம் – அரசு வருவாய்(வரி)த்துறை.
3 வரிப்பொத்தக நாயகன் – அரசு வரிக்கணக்குப்
பதிவேட்டுத்துறை மேலலுவலர்.
4 தளிகை – உண்கலம் (தட்டு).
5 பலம் – ஓர் எடை.

கிரந்தம்-2

து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 14

படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.

[1] கீழ்வரும் கல்வெட்டு உடுமலை அருகிலுள்ள கடத்தூர் மருதீசர் கோயிலில் உள்ள தூண் கல்வெட்டு. தூணின் மூன்று சதுரங்களில் மூன்று பகுதியாகக் கொடுக்கப்பட்டுள்ளது. எளிமையான ஒரு கல்வெட்டு. ஒளிப்படத்தை அவரவர் தேவைக்கேற்பப் பெரிதாக்கி எழுத்துகளைப் படித்துப்பார்க்க.

தூணின் முதல் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி

P1080081

தூணின் முதல் சதுரத்தின் பாடம்:

ஸ்வஸ்திஸ்ரீ
வீரசோழ தே
வற்கு யாண்
டு பத்தொன்
பதாவது

தூணின் இரண்டாம் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி

P1080082

தூணின் இரண்டாம் சதுரத்தின் பாடம்:

வெள்ளப்ப நா
ட்டுத்தேவி
யர் சேரியில்
கோளந் இரா
மநாந அழ(கி)
ய மாணிக்கப்
பல்லவரைய

தூணின் மூன்றாம் சதுரத்தில் கல்வெட்டுப்பகுதி

P1080083

தூணின் மூன்றாம் சதுரத்தின் பாடம்:

நேந் இத்தூண்
செய்வித்தேந்

——————————————————————————————————————————————-
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 15

படிக்கும் பயிற்சியில் மேலும் ஓரிரு கல்வெட்டுகள் கீழே;

Rajarajan pallipadai kalvettu

[1] இராசராசன் பள்ளிப்படைக் கல்வெட்டு.

கல்வெட்டின் பாடம்:

ஸ்வஸ்திஸ்ரீ ஸகலபு4வந சக்ரவத்திகள் ஸ்ரீ கு
லோத்துங்க சோழதேவற்கு யாண்டு நாற்ப
த்திரண்டாவது ஸ்ரீ சிவபதசேகரமங்கலத்து
எழுந்தருளிநின்ற ஸ்ரீராஜராஜதேவராந ஸ்ரீ
சிவபாதசேகரதேவர் திருமாளிகை முன்பில்
பெரியதிருமண்டபமுன்…டுப்பு ஜீ(ர்)
நித்தமையில் இம்மண்டபம் எடுப்பி
த்தார் பிடவூர் பிடவூர் வேளான் வேளிர்
அரிகேசவனாந கச்சிராஜற்காக இவ்வூர்
யகம் செய்துநின்ற ஜயசிங்ககுல கா
வளநாட்டு குளமங்கல நாட்டு சா
மங்கலத்து சாத்தமங்கலமுடை
ன நம்பிடாரன் நாடறிபுகழுன் இ
டன் விரதங்கொண்டு செய்தார் இ
(ர்) பிடார்களில் ராஜேந்த்ரசோழனு
(ட) நாயகநான ஈசாநசிவரும் தேவ
யமந அறங்காட்டிப்பிச்சரும் ||-

குறிப்பு: பச்சைவண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.
ஜீர்நித்தமையில்-அழிவு ஏற்பட்டமையால்

[2] உடுமலை-கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டு:

P1080078

கல்வெட்டின் பாடம்:

1. இருதூணி குறுணிக்கும் பூவில் எண்கல்லு பாட்டம் அளந்
2. ற்கும் குறுணி இரு நாழி அரிசி அமுதுபடி சென்றுவ(ரு)
3. . த்திரத்துக்கு ஆறுநாழி சோறும் இட்டு வருவ
4. சோழபட்டனும் கைக்கொண்ட அச்சு இரண்(டு)

[3] உடுமலை-கடத்தூர் மருதீசர் கோயில் கல்வெட்டு:

கல்வெட்டின் பாடம்:

கும் கோவணப்பொழிக்கு தெற்கும் இந்நான்கெல்லைக்கு 20 – வி. இ
நாச்சியாற்கும் வினாயகப்பிள்ளையாற்கும் க்ஷேத்திரபாலப்பிள்(ளையா)ற்
சனி எண்ணைக்காப்புக்கு வந்துசேவித்த ஆடுபாத்திரம் பாடு(பா)த்
டைய சிவபிராமணன் சைய்வச்சக்கரவத்தியும் விக்கி
ணை சாத்திவருவோம்மாகவும்
குறிப்பு: பச்சைவண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.

—————————————————————————–

கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 16

கல்வெட்டு படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. வழக்கம்போல், படங்களை உருப்பெருக்கம் செய்து படியுங்கள். எழுத்துகளை அதன் வடிவத்திலேயே (பார்வைப்படி) எழுதிப்பார்ப்பது நல்ல பயன் தரும்.

கல்வெட்டு – 1

Copy of P1040100

கல்வெட்டின் பாடம் :

ம் குமுதகத்திலும் வெட்டிக்கிடந்த
ட்டிஎடுத்து சுந்தரபாண்டிய தே
த படியே ஆற்றூருடையான்
ழதேவற்கு யாண்டு 35 வது கெ
றம் உடைய நாயனார் கோயிலில்
ல் நாள் ஒன்றுக்கு சந்தி ஒன்றுக்
நாழியும் ஆக நாள் ஒன்றுக்கு அரிசி
க்கும் நெல்லு குறுணி ஒரு நாழியு

குறிப்புகள்:

குமுதகம் – கோயில் விமானத்தின் அடித்தளப்பகுதியில் ஒன்று. குமுதம்
என்பது பொதுவாக வழங்கும் பெயர்.
சந்தி – பூசை வேளை
நாழி = 1 படி
குறுணி = 8 நாழி

கல்வெட்டு – 2

P1080141

கல்வெட்டின் பாடம் :

ஸ்வஸ்திஸ்ரீ வீரராஜே
ந்த்ர தேவற்கு யாண்டு
பத்தாவது கோடி
க்காரைத்தொழிலிர
ருக்கும் பெ(ரு)மாள் உ
ரிமையா(ரி)ல் இராச
சிசிறியானேந் இட்
(திரு) வாயல் முகவணை
(உத்திரம்) உள்பட இந்நிலை
கால் இட்டேந் இராசசிறி
யானேந்

குறிப்புகள் :
பெருமாள் – அரசன்
உரிமையார் – அரசனுக்கு உரிமையானவர் (இங்கே படை வீரர்கள்
ஆகலாம்).
திருவாயல்(திருவாயில்), முகவணை, உத்திரம், நிலைக்கால் – கட்டிட
உறுப்புகள்.

கல்வெட்டு – 3

கல்வெட்டின் பாடம் :

1. ஸ்வஸ்திஸ்ரீ வீரராஜேந்திர தேவ
2. ற்கு யாண்டு பதிநஞ்சாவது எதிர் எதிர்
3. ரைவழினாட்டுக் கோடிக்காரைத்
4. (தொ)ழு முதலிகளில் சோழன் கூத்தனான
5. ராசேந்திர இருங்கோளனேன் பெருமா
6. டுகக்கொத்துக்கு நாயக்கமாரில் தொ

குறிப்பு :
கரைவழி நாட்டுக் கோடிகாரைத்தொழு என்னும் ஊர் குறிப்பிடப்படுகிறது.
முதலி – தலைவன்; அரச அதிகாரி.
கொத்து – வேலையாள் அல்லது ஊழியர் தொகுதி. இங்கே குரிப்பிடப்
படுவது பெருமாள் வடுகக் கொத்து என்பவர்.
(பெருமாள் – அரசன்)

குறிப்பு : சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்த எழுத்துகள்.

————————————————————–

கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 17

கல்வெட்டு படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. வழக்கம்போல், படங்களை உருப்பெருக்கம் செய்து படியுங்கள். எழுத்துகளை அதன் வடிவத்திலேயே (பார்வைப்படி) எழுதிப்பார்ப்பது நல்ல பயன் தரும்.

கல்வெட்டு – 1

Copy of P1070195

கல்வெட்டுப் பாடம்:

1 ஸ்வஸ்திஸ்ரீ வீரராசேந்
2 திர தேவற்கு யாண்டு 40
3 வது வைகாசி திங்க வடபரிசா
4 ர நாட்டில் சேவூரில் வெள்ளா
5 ன் உகையரில் தேவந்தேவநேந்
6 ஆளுடையா திருமுருகந்பூண்டி
7 நாயநாற்கு சந்தியாதீபம் ஒந்(று)
8 க்கு சீபண்டாரத்தில் ஒடுக்கி(ன)
9 பழஞ்சலாகை அச்சு ஒன்றுக்
10 கும் சந்திராதித்தவரை செல்
11 வதாகக் கல்வெட்டுவித்தே
12 ந் இது பந்மாஹேஸ்வர
13 க்ஷை

குறிப்புகள் :

சிவப்பு வண்ண எழுத்துகள் கிரந்தம்
கல்வெட்டின் காலம் கி.பி. 1247. அரசன் வீரராசேந்திரன், கொங்குச்சோழன்.
வடபரிசார நாடு – கொங்குப்பகுதியில் பண்டு வழங்கிய இருபத்து நான்கு நாட்டுப்பிரிவுகளில் ஒன்று.
உகையர் – கொங்கு வெள்ளாளர்களில் ஒரு பிரிவு
சீபண்டாரம் – கோயில் கருவூலம்; ”ஸ்ரீ” என்பது வடமொழி எழுத்தைத் தமிழாக்கியது.
ப்ழஞ்சலாகை அச்சு – கொங்குப்பகுதியில் புழக்கத்தில் இருந்த பழங்காசு.
வெள்ளாளன் தேவன் தேவன் என்பவன், திருமுருகன்பூண்டி கோயிலுக்குச் சந்திவிளக்கு எரிப்பதற்காகக் காசு கொடை அளித்த செய்தி கூறப்படுகிறது.

கல்வெட்டு – 2

Copy of P1060325

கல்வெட்டுப் பாடம்:

1 ஸ்வஸ்திஸ்ரீ விசையாபுதைய சாலிவாகன சகாத்தம் (உ)
2 1458ன் மேல் செல்லாநின்ற துன்
3 முகி வரு. அற்பசி மீ 7 தேதி துவாதெசியும் புத
4 வாரமும் உத்திர நக்ஷரமும் பெற்ற னாள் ஸ்ரீ
5 ன் ராசாதிராசன் ராசபரமேசுரன் ஸ்ரீ வீரப்பி
6 றதாப ஸ்ரீவீர அச்சுத்தராயமகாராயர் பிறுது
7 வி ராச்சியம் பண்ணி அருளாநின்ற காலத்து அந்
8 த அச்சுதராயமகாராயற்கு தெக்ஷிணாபுமாதெ
9 ண்டமான் காவேரிவல்லபன் கடகசூறைக்காற்
10 றன் விருதன் வாயுவந்தி விருதுகஜாசிங்கன் பெ
11 க்கெத்துராசுல ஒக்கெத்துகண்டன் மண்டலி
12 க மகலராசன் உறையூற்புரவாதீசுரன் பொன்னா
13 ம்பலநாத ஸ்ரீபாதசேகர காசிபகோத்திரத்
14 து ஆபஸ்தம்ப சூத்திரத்து சூரிய வங்கித்தில் சோ
15 ழகுல ஒங்கர சென்னையதேவ மகாராசாவின் பு
16 த்திரரான ஸ்ரீமன்மகாமண்டலேசுர வாலையதேவமகா
17 ராசா நம்முடைய சுவாமி அச்சுத்தராயமகாராயற்கு பு

குறிப்புகள் :

கல்வெட்டின் காலம், கல்வெட்டில் சாலிவாகன சகாத்தம் 1458 எனக்குறிப்பிடப்பெறுகிறது. சாலிவாகன ஆண்டு, சக வருடம், சகரை ஆண்டு ஆகிய அனைத்தும் சாலிவாகன சகாப்தத்தைக்குறிப்பதாகும். இந்த ஆண்டுடன் 78 ஆண்டுகளைச் சேர்க்க கிறித்தவ ஆண்டு பெறப்படும். எனவே இக்கல்வெட்டின் காலம் கி.பி. 1536. விஜய நகர அரசர்கள் காலம். இங்கு, அரசர் அச்சுதப்ப நாயக்கர். கல்வெட்டில் கொடுக்கப்பட்ட துன்முகி தமிழ்வட்டத்து ஆண்டு கி.பி. 1536-ஆம் ஆண்டுடன் மிகச்சரியாகப்பொருந்துவதைக் காணலாம். ஒரு சில், கல்வெட்டுகளில், இக்காலக் குறிப்புகள் பொருந்தாமல் போவதுண்டு. (இந்த 2016-ஆம் ஆண்டும் துன்முகி/துர்முகி என்பதை நோக்குக.) தமிழ் மாதமான ஐப்பசி மாதம், கல்வெட்டில் அற்பசி மாதம் எனக்குறிக்கப்பெறுகிறது. இது போன்ற பெயர்களை நினைவில் கொள்ளுதல் கல்வெட்டுகள் படிக்க் உதவும். காலக்குறிப்பில், புதவாரம், துவாதசி திதி, உத்திர நட்சத்திரம் ஆகிய குறிப்புகள் விளக்கமாகத் தரப்பட்டுள்ளதை நோக்குக.
கல்வெட்டுக்காலத்தில், விஜயநகர அரசரின் சார்பாக கொங்குமண்டலத்தின் மகாமண்டலேசுவரனாக நிர்வாகம் செய்தவன் வாலையதேவமகாராசன். அவனுடைய கோத்திரமும், சூத்திரமும் தரப்பட்டுள்ளன.
விஜயநகர அரசருக்கும், மண்டலாதிபதிக்கும் பல்வேறு விருது/சிறப்பு அடைமொழிகள் தரப்பட்டுள்ளன.

——————————————————————

கல்வெட்டு எழுத்துகள் கற்போம் – 18

கல்வெட்டு படிக்கும் பயிற்சியில் மேலும் சில கல்வெட்டுகள் இங்கு தரப்பட்டுள்ளன. வழக்கம்போல், படங்களை உருப்பெருக்கம் செய்து படியுங்கள். எழுத்துகளை அதன் வடிவத்திலேயே (பார்வைப்படி) எழுதிப்பார்ப்பது நல்ல பயன் தரும்.

கல்வெட்டு – 1 கல்லின் முன்புறம்

Copy of P1060940

கல்வெட்டின் பாடம் :

1 யுவ வரு சித்
2 திரை மீ
3 ஸ்ரீ ராமப்ப
4 அய்யனவ
5 ர்கள் காரிய
6 த்துக்குக்கற்த
7 ரான சிதம்
8 பரநாத பிள்ளை
9 பாரபத்தியத்தில்
10 வடபரிசாரநா
11 ட்டு ஒத்தனூரா
12 ன பெரும்பழ
13 னத்துக் காணி
14 யுடைய வெள்
15 ளாழர் மூலர்க
16 ளில் வேலப்ப
17 னும் பாளந்தை
18 களில் உத்தமனு
19 (ம் மேற்படியூர்ச்)
20 …………………………….

கல்லின் பின்புறம்

Copy of P1060940

கல்வெட்டின் பாடம் :

1 இ நித்த தன்ம
2 ம் பரிபாலன
3 மாக நடத்தின
4 பேரெல்லா
5 ங் காசிராமே
6 சுரம் சேவித்தா
7 பலன் பெறுவ
8 ராகவும் இந்த
9 த்தன்மம் வில
10 கினவர்கள் கெ
11 ங்கைக் கரையி
12 ல்க்காராம்பசு
13 ப்பிராமணன்
14 மாதாபிதாகுரு
15 இவர்கள் அஞ்
16 சுபேரையுங்
17 கொன்ற தோ
18 ஷத்திலே
19 போகக்கடவ
20 தாகவும்

குறிப்பு :

கோவை மாவட்டக் கல்வெட்டுகள் நூலின் குறிப்புகளில், ராமப்பய்யன் அலுவலராகிய சிதம்பரநாதபிள்ளை காலத்தில் வெளியிடப்பெற்ற அரசு ஆணை
என்று கூறப்பட்டுள்ளது. காலம் கி.பி. 17-ஆம் நூற்றாண்டு என்று தரப்பட்டுள்ளது.
ராமப்பய்யன் என்பவர் திருமலை நாயக்கரின் படைத்தளபதி ஆவார். எனவே இக்கல்வெட்டு, திருமலை நாயக்கர் காலத்தைச் சேர்ந்தது. திருமலை நாயக்கரின் ஆட்சிக்காலம் கி.பி. 1623-1659. கல்வெட்டில் வரும் யுவ வருடம் (அறுபது ஆண்டுகள் கொண்ட தமிழ் ஆண்டு வட்டத்தில் ஒரு ஆண்டின் பெயர்) என்னும் குறிப்பு
கி.பி. 1635-ஆம் ஆண்டுடன் பொருந்துகிறது. எனவே, கல்வெட்டின் காலம் சரியாகக்
கி.பி. 1635 எனலாம். இங்கே தரப்பட்டுள்ள கல்வெட்டின் படத்தில் 20-ஆம் வரியிலிருந்து மேலும் ஒன்பது வரிகள் நிலத்தில் புதைந்து போயுள்ளன.
மேற்படி நூலின் குறிப்புப்படி, கொங்கு நாட்டின் வடபர்ரசார நாட்டுப்பிரிவைச்
சேர்ந்த ஒத்தனூரான பெரும்பழனத்து உத்தமசோழீசுவரர் கோயிலுக்கு அபிஷேகம்,
நைவேத்தியம், நந்தாதீபம், சந்தியா தீபம் ஆகியவற்றுக்காக ஊர்ச்சந்தையின் மகமை
வருமானத்தைக் கொடையாக அளித்துள்ள செய்தி தெரியவருகிறது.
காரியத்துக்குக் கர்த்தரான என்னும் தொடர் நாயக்கர் காலக் கல்வெட்டுகளில்
பெரும்பாலும் காணப்படுகின்ற ஒன்று. வெள்ளாளர்களில், மூலர்கள், பாளந்தைகள்
ஆகிய கூட்டப்பிரிவினர் இருந்துள்ளனர் என்பது அறியப்படுகிறது.
தன்மத்தைக் காப்பவர், காசி-இராமேசுவரம் சென்றுவழிபட்ட நன்மையையும்,
தன்மத்தை விலக்கினவர் கங்கைக் கரையில், பசு, பிராமணன், தாய்,தந்தை, குரு
ஆகிய ஐவரைக்கொன்ற தோஷத்தை அடைவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது
குறிப்பிடத்தக்கது.
பழங்கல்வெட்டுகளில் நல்ல தமிழ்ச்சொற்கள் பயின்றதைப் போலன்றி,
நாயக்கர் காலக் கல்வெட்டுகளில், காரியகர்த்தர், பாரபத்தியம், அபிஷேகம்,
நைவேத்தியம், பரிபாலனம், சேவித்தல், தோஷம் ஆகிய வடமொழிச் சொற்கள்
மிகுதியும் காணப்படுவது சிந்தனைக்குரியது. ஆட்சியாளர்களைச் சார்ந்தே மொழி
வளர்வதும் தேய்வதும் நடைபெற்றுவந்துள்ளது என்பது வரலாற்றுச் சான்றாகும்.
கல்வெட்டில் வரும் பெரும்பழனம் (பெரும்பழன நல்லூர்) தற்போது
பெருமாநல்லூர் என்று அழைக்கப்படுகிறது.

—————————————————
து.சுந்தரம், கல்வெட்டு ஆராய்ச்சியாளர், கோவை.
அலைபேசி : 9444939156.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *