க. பாலசுப்பிரமணியன்

 

திரு வல்லபர் (திருவல்லா)  

images (3)

மார்கழி பிறந்தது மங்களம் நிறைந்தது

மாதவன் நினைவில் மகிழ்வும் வளர்ந்தது

மாலையை ஏந்திய கோதையைப் போல

மாலனைத் தேடி மனமும் சென்றது !

 

ஆயிரம் பரிதிகள் அணியாய் வந்ததோ

பாயிரம் பாடிப் பணிவாய் எழுப்பிட ?

தாயிடம் சேய்போல் தவழ்ந்தது உலகமே

வேறிடம் இல்லை வேங்கடன் பாதமே !

 

சேடனின் உடலினில் சீருடன் கிடந்தும்

வேடங்கள் பலவும் விந்தையாய் எடுத்துத்

தேடிய நெஞ்சங்களைத் தேடியே வருவான்

தேனினும் இனிய திருவுடை அரங்கன் !

 

கூப்பிடப் பெயர்கள் கோடியில் உண்டு

கூவியே அழைத்தால் கோவிந்தன் வருவான்

கூரிட அரக்கரைக் கூடவே இருப்பான்

கூப்பிடும் கைகள் குலத்தினைக் காக்க !

 

தோளுடை வலிமை துவாரகை வளர்ந்தது

தோகளன் வதைக்கத்  துணையாய் வந்தது

தோளுடைத் துணியை தோதுடன் விலக்கிடத்

தாயவள் தரிசனம் திருமார்பில் கிடைத்தது !

 

வல்லவை கரையினில் வளர்ந்திடும் அருளே

வானவர் வேதியர் வணங்கிடும் வல்லபா !

வந்தவர் நின்றவர் வேண்டிய பொழுதில்

வல்லமை வழங்கிடும் வானுறை வேங்கடா !

 

சங்குடன் சக்கரம் சங்கடம் நீக்கிடும்

மங்கிடா ஒளியினை மதியினில் சேர்ந்திடும்

தங்கிடா துயரங்கள் தாள்களைப் பற்றினால்

பங்கிலாப் புகழ்தரும் பாவையின் நாயகா !!

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *