க. பாலசுப்பிரமணியன்

 

திருக்குளந்தை

அருள்மிகு மாயக்கூத்தர் திருக்கோவில்

26219293_1732776533440727_6333504764046447991_n

 

அச்சமின்றி ஆடினாயே தக்கத்திமி தாளமிட்டு

அச்சமானின் ஆணவத்தை மிச்சமின்றி அழித்துவிட்டு

அச்சுதனே !  மாயவனே ! மாதவனே !மாயக்கூத்தனே !

அச்சமெல்லாம் நீங்கிடுதே ஆதிமூலா என்றழைக்க !!

 

வேங்கடனாய் நின்றகோலம் நினைவிருக்கும் முக்காலம்

வேண்டிவரும் அடியார்கள் விழைகின்ற அருட்கோலம்

வேதரசன் திருமகளும் விரும்பியழைத்த திருக்கோலம்

வேதவனின் திருமார்பில் கௌஸ்துபத்தின் விழாக்கோலம் !

 

பெருங்குளத்தில் பேரழகாய் நின்றவனே பெருமாளே

வருந்துயரை வருமுன்னே விலக்கிடுவாய் வாசுதேவா !

கருமங்கள் அனைத்தையுமே காலடியில் சமர்பித்தேன்

தருமங்கள் முன்னிறுத்தி தந்திடுவாய் நல்வாழ்வை !

 

காலையிலே உனைக்கண்டால் கவலையெல்லாம் தீர்ந்திடுமே

மாலையிலே உனைக்கண்டால் மனமென்றும் மகிழ்ந்திடுமே

போதையன்றோ உன்காட்சி புவனமெல்லாம் உன்அரசாட்சி !

பாதையெல்லாம் துணைவந்தால் ஆனந்தத்தின் அருளாட்சி !!

 

நாளெதற்கு கோளெதற்கு நானுன்னைப்  பார்ப்பதற்கு ?

நடுநிசியும் நண்பகலும் நல்லுறவை வளர்த்திடுமோ ?

நாலுவேதமும் நாலாயிரமும் போற்றிடவே போதிடுமோ?

நன்நெஞ்சில் உனைவைத்தால் நல்விருந்தாய் வாராயோ ?

 

பாலோடு தேன்சேர்த்துப் பன்னீரால் நீராட்டி

பாயசத்தைப் பருகிடவே நானுன்னை வேண்டேன் !

பானகத்தை படைத்தவுடன் பசிதீர்ந்து நிற்பவனே

பாற்கடலை விட்டுடனே பறந்தோடி வருவாயோ ?

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *