கேசவ் வண்ணம் – கிரேசி எண்ணம்

பயமாசை கோபம் பசிதாகம் தூக்கம்
மயமான கம்ஸ மனமே -அயலாம்
இவைதவிர்த்து ஆழ இதயத்தில் கண்ணன்,
சுவைசுகித்து வாழ சுகம்….கிரேசி மோகன்….!
எல்லோர் நெஞ்சிலும் கண்ணன் உள்ளான்….குசேலர் நெஞ்சில் குபேரன் கண்ணன் பக்தி அவலுக்கு அளித்தார் செல்வம்….!
———————————————————————————————————————————————————————————————————————————————
’’கஞ்சனின் நெஞ்சில் குபேரனாய்க் குந்தினோய்
அஞ்சலென்(று) அறிவித்தும் அச்சத்தால் -மஞ்செழில்
வண்ணனை வாள்கொண்டு வெட்டும் வெகுளியே!(கோபிஷ்டா)
கண்ணனை நெஞ்சால் கருது’’….